அம்பின் தொகுதிகள்; மேனியை மூடி முற்றுறச் சுற்றின் மூழ்க - (இலக்குவனது) மேனியை முழுவதுமாக மூடி மறைத்துத் தைக்க; ஊடு செய்வத ஒன்று உணர்ந்திலன் - அவ்விடை நேரத்தில் இன்னது செய்வது என்று ஒன்றும் உணராதவனாகி; உணர்வு புக்கு ஒடுங்க - தன்னுணர்வு உள்ளே சென்று ஒடுங்க; ஆடல்மாக்கரி சேவகம் அமைந்தென அயர்ந்தான் - வலிய பெரிய யானையானது தான் துயிலுமிடத்தில் அயர்ந்து துயில் கொண்டாற்போன்று அயர்ந்தான். | (171) | 8612. | அனுமன், ‘இந்திரன் வந்தவன் என்கொல், ஈது அமைந்தான்? இனி என்? எற்றுவென் களிற்றினோடு எடுத்து’ என எழுந்தான்; தனுவின் ஆயிர கொடி வெங் கடுங் கணை தைக்க, நினைவும் செய்கையும் மறந்துபோய், நெடு நிலம் சேர்ந்தான். | அனுமன், வந்தவன் இந்திரன் ஈது என்கொல் அமைந்தான்? (அது கண்ட) அனுமன், ‘வந்தவனோ இந்திரன், (நம்மோடு போர் செய்தலாகிய) இதனை எது கருதி மேற்கொண்டான்? இனி என்? எற்றுவன் களிற்றினோடு எடுத்து என எழுந்தான் - இவ்வாறு பகைவனாக வந்துள்ளமையால்) இப்பொழுது செய்தற்குரியது வேறு என்ன இருக்கிறது? (இவனை) யானையோடும் எடுத்து எற்றித் தள்ளுவேன்’ எனக்கிளர்ந்து எழுந்தவன்; தனுவின் ஆயிர கோடி வெங்கடுங்கணை தைக்க - (தனது) உடம்பில் ஆயிரங்கோடி வெம்மை மிக்க அம்புகள் தைக்க; நினைவும் செய்கையும் மறந்து போய் நெடு நிலம் சேர்ந்தான் - தன்நினைவும் செயலும் மறந்து போக நெடியதரையின் கண் வீழ்ந்தான். | (172) | 8613. | அருக்கன் மா மகன், ஆடகக் குன்றின்மேல் அலர்ந்த முருக்கின் கானகம் ஆம் என, குருதி நீர் முடுக தருக்கி, வெஞ் சரம் தலைத்தலை மயங்கின தைக்க, உருக்கு செம்பு என கண்ணினன், நெடு நிலம் உற்றான். | அருக்கன் மாமகன் - பெருமை வாய்ந்த சூரியன் புதல்வனான சுக்ரீவன்; ஆடகக் குன்றின் மேல் அலர்ந்த - |
|
|
|