கிடந்த ஏக்கறவால் - ஒரு பெண்ணின் முலையிடத்துக் கொண்ட ஆசையால் தாழ்ந்தேன்; வாழ்ந்தேன் - (மானம் இன்றி) இன்னும் உயிருடன் இருக்கிறேன்; உனை இழந்தும் இன்னம் இரேனோ - உன்னை இழந்தும் இன்னும் (உயிருடன்) இருக்க மாட்டேனோ? | ஓரு பெண்ணின் மீது கொண்ட காமம் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் படுத்தும் பாட்டை இப்பாடலில் இராவணன் கூறி அரற்றுகிறான். எம்பியர்கள் - கரன் தூடணன் கும்பகருணன் முதலியோர். மாதுலனார் - மாமனாகிய மாரீசன். ஏக்கறவு - ஆசையால் தாழ்தல். | (83)
| | 7715. | ‘தன்னைத்தான், தம்பியைத்தான், தானைத் தலைவனைத்தான், மன்னைத்தான், மைந்தனைத்தான், மாருதத்தின் காதலைத் தான், பின்னைக் கரடிக்கு இறையைத்தான், பேர் மாய்த்தாய் என்னத்தான் கேட்டிலேன்; என் ஆனவாறு இதுவே! | தன்னைத்தான் - இராமன் தன்னைத்தான்; தம்பியைத் தான் - தம்பியாகிய இலக்குவனைத்தான்; தானைத் தலைவனைத் தான் - வானர சேனைத் தலைவனாகிய நீலனைத்தான்; மன்னைத் தான் - வானர அரசன் ஆகிய சுக்ரீவனைத்தான்; மைந்தனைத்தான் - (வாலி) மகனாகிய அங்கதனைத் தான்; மாருதத்தின் காதலைத் தான் - காற்றின் காதல் மைந்தன் ஆகிய அனுமனைத் தான்; பின்னைக் கரடிக்கு இறையைத்தான் - மற்றும் கரடிகளுக்குத் தலைவன் ஆகிய சாம்பவானைத்தான்; பேர் மாய்த்தாய் என்னத் தான் கேட்டிலேன் - பேரே இல்லாமல் செய்து கொன்றாய் என்று கேட்டேனில்லை; என் ஆனவாறு இதுவே - (உனக்கு இச்சாவு) எப்படி ஆனது அதன் தன்மை இதுவா. | (84) | கலி விருத்தம் (வேறு வகை) | | 7716. | ‘ஏழை மகளிர் அடி வருட, ஈர்ந் தென்றல் வாழும் மணி அரங்கில், பூம் பள்ளி வைகுவாய்! சூழும் அலகை துணங்கைப் பறை துவைப்ப, பூமி அணைமேல் துயின்றனையோ, போர்க்களத்தே? |
|
|
|