பொன்மலையின் மேல்பூத்துத் தோன்றும்; முருக்கின் கானகம் ஆம் எனக் குருதி நீர் முடுக - செம்முருங்கக் காட்டினை யொத்து (தன் உடம்பின்மேல்) இரத்தம் சுரந்து பெருகித் தோன்றுமாறு; வெஞ்சரம் தலைத் தலைமயங்கின தைக்க - வெம்மையுடைய அம்புகள் (தன் உடம்பின்) இடந்தோறும் விரவினவாய்த் தைத்து ஊன்றுதலால்; உருக்கு செம்பு எனக் கண்ணினன் - ‘உருகிய செம்பு’ எனக் கூறத்தக்க (சிவந்த) கண்களை உடையவனாகி; தருக்கி, நெடுநிலம் உற்றான் - செருக்குற்று நீண்டதரையிடத்தே வீழ்ந்தான். |
(173) |
| 8614. | அங்கதன், பதினாயிரம் அயில் கணை அழுந்த; சிங்கஏறு இடியுண்டென நெடு நிலம் சேர்ந்தான்; சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான், துங்க மார்பையும் தோளையும் வடிக் கணை துளைக்க. |
அங்கதன் பதினாயிரம் அயில்கணை அழுந்த - அங்கதன் (தன் உடல் மீது) பதினாயிரம் கூரிய அம்புகள் தைக்கப்பெற்று; சிங்க ஏறு இடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான் - ஆண்சிங்கம் இடியினால் தாக்கப் பட்டாற்போன்று நெடிய நிலத்தில் வீழ்ந்தான்; துங்க மார்பையும் தோளையும் வடிக்கணை துளைக்க - உயர்ந்த மார்பையும், தோளையும் கூரிய அம்புகள் துளைத்ததனால்; சங்கம் ஏறிய பெரும் புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான்-வீரர் குழுவில் உயர்ந்து விளங்கிய பெரிய புகழினனான சாம்பவனும் (தரையில்) சாய்ந்தான். |
சங்கம் - குழு, அவைக்களம். சிறந்த அனுபவமும் எடுத்ததை முடிக்கும் ஆற்றலும் விடா முயற்சியும் பின்னிடாவீரமும் அமையப் பெற்றவன் சாம்பவான். எனவே, பெரும்புகழ்ச்சாம்பன் எனப்பட்டான். இன்றும் “நீ பெரிய சாம்பவனோ?” எனவும், “அதில் அவர் சாம்பவான்” எனவும் உலகியலில் பேசப்படுதலைக் காணலாம். |
(174) |
| 8615. | நீலன், ஆயிரம் வடிக் கணை நிறம் புக்கு நெருங்க, காலனார் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்; ஆலமே அன்ன பகழியால், பனசனும் அயர்ந்தான்; கோலின் மேவிய கூற்றினால், குமுதனும் குறைந்தான். |