பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 581

நீலன் ஆயிரம்  வடிக்கணை  நிறம்புக்கு   நெருங்க - (வானர
வீரர்களில்) நீலன் என்பான் ஆயிரம் கூரிய  அம்புகள் (தன்)  மார்பில்
புகுந்து  செறிதலால்; காலனார்  முகம்  கண்டனன் - (உயிர் துறந்து)
கூற்றுவனது முகத்தைக் காண்பானாயினான்; இடபன் விண்  கலந்தான்
- இடபன் வானுலகடைந்தான்; பனசனும் ஆலமே  அன்ன பகழியால்
அயர்ந்தான்
 - பனசன்  ஆலகால நஞ்சினைப்  போன்ற  அம்பினால்
அயர்வுற்றான்; குமுதனும் கோலின் மேவிய கூற்றினால் குறைந்தான்
- குமுதன் அம்பின் வடிவத்தில் வந்த கூற்றுவனால் உயிர்குறைந்தான்.
 

                                                 (175)
 

8616.வேலை தட்டவன், ஆயிரம் பகழியால், வீழ்ந்தான்;
வாலி நேர் வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார்;
கால வெந் தொழில் கவயனும் வானகம் கண்டான்;
மாலை வாளியின் கேசரி மண்ணிடை மடிந்தான்.
 

வேலை  தட்டவன்,  ஆயிரம் பகழியால், வீழ்ந்தான் - கடலை
அணை  கட்டித் தடுத்தவனாகிய நளன்  ஆயிரம் அம்புகளால் வீழ்ந்து
இறந்தான்;  வாலி நேர்  வலி மயிந்தனும் துமிந்தனும் மடிந்தார் -
வாலியை  ஒத்த வலிமை வாய்ந்தமயிந்தன்  என்பானும் (அவன் தம்பி)
துமிந்தனும்  ஒருசேர    மாண்டனர்;   காலவெந்தொழில் கவயனும்
வானகம் கண்டான்
 -  காலனையொத்த  கொடுந்தொழிலை உடைய
கவயன்  என்பவனும்   (உயிர்துறந்து)  வானகம்   சேர்ந்தான்; மாலை
வாளியின்  கேசரி   மண்ணிடை  மடிந்தான்
 -  மாலை போன்று
(தொடர்ச்சியாக)  வந்த அம்புகளால் கேசரி என்பான் நிலத்தில் வீழ்ந்து
இறந்தான்.
 

தட்டவன்     - (கடலை  மலைகளைக்  கொண்டு  அணைகட்டித்)
தடுத்தவனாகிய  நளன். “தட்டோரம்ம விவண்  தட்டோரே” எனவரும்
புறப்பாடல்   (18)   காணத்தக்கது.   வாலி   நேர்வலி   -  வாலியை
யொத்தவலிமை;  காலவெந்தொழில்  -  காலனைப்   போலக் கொன்று
குவிக்கும்  தொழில்.  மாலைவாளி  -  மாலைபோன்று தொடர்ச்சியாக
வந்த அம்புகள்.
 

                                                 (176)
 

8617.
 

கனகன் ஆயிரம் கணை பட, விண்ணிடைக் கலந்தான்;
அனகன் ஆயின சங்கனும் அக் கணத்து அயர்ந்தான்;