பக்கம் எண் :

582யுத்த காண்டம் 

முனையின் வாளியின் சதவலி என்பவன் முடிந்தான்;
புனையும் அம்பினில் தம்பனும் பொருப்பு எனப்
                                 புரண்டான்.*
 

கனகன்  ஆயிரம் கணைபட விண்ணிடைக் கலந்தான் - கனகன்
என்பவன்   ஆயிரம்    அம்புகள்   பாய்ந்தமையால்  (உயிர்   நீத்து)
விண்ணில்    கலந்தான்; அனகனாயின    சங்கனும்   அக்கணத்து
அயர்ந்தான்
  -   (மாயையால்)   அரூபியான   சங்கன்  என்பவனும்
(அம்புகள்பட்ட)  அந்தக்  கணத்திலேயே   அயர்ந்தான்;   முனையின்
வாளியின்  சதவலி  என்பவன்  முடிந்தான்
-  முனைதீட்டப் பெற்ற
அம்பினால்  சதவலி  என்பவன்  இறந்தான்;   புனையும்  அம்பினில்
தம்பனும்  பொருப்பு  எனப்  புரண்டான்
-  புனைந்து ஏவப் பெற்ற
அம்பினால் தம்பன் என்பவனும் மலைபோல மண்ணில் புரண்டான்.
 

                                                 (177)
 

8618.

விந்தம் அன்ன தோள் சதவலி, சுசேடணன், வினதன்,
கெந்தமாதனன், இடும்பன், வன் ததிமுகன், கிளர,
உந்து வார் கணை கோடி தம் உடலம் உற்று ஒளிப்ப,
தம்தம் நல் உணர்வு ஒடுங்கினர், மண் உறச் சாய்ந்தார்.*
 

விந்தம்  அன்ன தோள் சதவலி சுசேடணன், வினதன் - விந்த
மலையினை  ஒத்து  உயர்ந்த  தோளையுடைய  சதவலி,   சுசேடணன்
வினதன்;    கெந்தமாதனன்,   இடும்பன்வன்   ததிமுகன்கிளர  -
கந்தமாதனன்,  இடும்பன்,  வன்மையுடைய   ததிமுகன்  ஆகிய வானர
வீரர்கள்,  கிளர்ந்துமேலெழ;  உந்துவார்கணை  கோடி  தம் உடலம்
உற்று ஒளிப்ப
  - (இந்திரசித்தனாற்) செலுத்தப்பட்ட நீண்ட  அம்புகள்
கோடிக்கணக்கின  வாகத்தம்  உடலில் அழுந்தத்  தைத்து மறைந்தலால்;
தம்தம்   நல்  உணர்வு  ஒடுங்கினர்  மண்  உறச் சாய்ந்தார்  -
தங்கள் தங்களது நல்லுணர்வு ஒடுங்கியவர்களாய் மண்ணிற்   பொருந்த
வீழ்ந்தார்கள்.
 

                                                 (178)
 

8619.மற்றை வீரர்கள் யாவரும் வடிக் கணை மழையால்
முற்றம் வீந்தனர்; முழங்கு பேர் உதிரத்தின் முந்நீர்