பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 583

எற்று வான் திரைக் கடலொடும் பொருது சென்று ஏற,
ஒற்றை வான் கணை ஆயிரம் குரங்கினை உருட்ட.
 

முழங்கு   பேர் உதிரத்தின் முந்நீர் - ஒலிக்கின்ற பெரிய குருதி
நீராகிய  (செங்)கடல்;எற்று வான் திரைக் கடலொடும் - மோதுகின்ற
பெரிய  அலைகளை  உடைய கருங்கடலோடு; பொருது சென்று ஏற -
எதிர்த்து  மோதி  மேற்  செல்லும்படி; ஒற்றை வான் கணை ஆயிரம்
குரங்கினை    உருட்ட  
  -   (ஆயிரம்   ஆயிரமாகப்   பெருகிய
பிரமாத்திரத்தின்)  ஒரு   தெய்வக்கணை   ஆயிரம் வானரங்கள் வீதம்
ஒரு  சேர  உருட்டித்தள்ள;  மற்றைவீரர்கள்  யாவரும் வடிக்கணை
மழையால்
  -   (மேலேகுறிக்கப்பட்டவர்களை   யொத்த)   ஏனைய
வானரவீரர்கள்   அனைவரும்   கூரிய  அம்பு  மழையால்;  முற்றும்
வீந்தனர்
- (தாக்கப்பட்டு) முழுமையாக அழிந்து போயினார்.
 

                                                 (179)
 

8620.தளைத்து வைத்தது, சதுமுகன் பெரும் படை தள்ளி;
ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்; உருமின்
வளைத்து வித்திய வாளியால், மண்ணொடும் திண்ணம்
முளைப் புடைத்தன ஒத்தன; வானரம் முடிந்த.
 

சதுமுகன்   பெரும்படை  தள்ளித் தளைத்து வைத்தது - நான்
முகனது  பெருமை   வாய்ந்த  படைக்கலமானது (வானரங்களைக் கீழே)
தள்ளிப் பிணித்துவிட்டது;ஒளிக்க, மற்றொரு புகலிடம் உணர்கிலர்  -
(அவ்விடத்தை  விட்டுத் தப்பியோடி)  மறைதற்கு  அன்னோர் வேறொரு
பாதுகாப்பான    இடத்தை   உணர்தற்கு  இயலாதவராயினர்;  உருமின்
வளைத்து   வித்திய   வாளியால்   மண்ணொடும்   திண்ணம்
-
இடியினைப் போன்று  சுற்றிலும்  எய்யப்பெற்ற  அம்புகளால்  பூமியுடன்
சேர்த்து    உறுதியாக;   முளைப்புடைத்தான்   ஒத்தன   வானரம்
முடிந்த
 -   முளையடிக்கப்   பட்டவற்றை   ஒத்தனவாய்  அங்குள்ள
வானரங்கள் யாவும் இறந்தன.
 
 

                                                 (180)
 

8621.குவளைக் கண்ணினை வான் அர மடந்தையர் கோட்டித்
துவள, பாரிடைக் கிடந்தனர்; குருதி நீர் சுற்றித்