பக்கம் எண் :

584யுத்த காண்டம் 

திவள, கீழொடு மேல் புடை பரந்து இடை செறிய,
பவளக் காடுடைப் பாற்கடல் ஒத்தது, அப் பரவை.
 

குவளைக்    கண்ணினைக்கோட்டி - நீலமலர்போன்ற கண்களைச்
சாய்த்து  நோக்கி;  வான் அரமடந்தையர்  துவள  -  வானுலகிலுள்ள
தேவமகளிர்    வாட்டமுற்று  வருந்த;   பாரிடைக்  கிடந்தனர்   -
(வானரவீரர்கள்) பூமியிற் (பிணமாகக்) கிடந்தார்கள்; குருதி நீர் சுற்றிக்
கீழொடு மேல் புடை பரந்து
- (அவர்தம் வெண்ணிற உடம்பினின்றும்
வெளிப்பட்ட)  இரத்த  நீர் கீழும் மேலும் பக்கங்களிலும் பரவி;  இடை
திவள  செறிய
- இடையிடையே நெருங்கி விளங்குதலால்; அப்பரவை,
பவளக்  காடுடைப்  பாற்கடல் ஒத்தது
- அந்த (வானரப்படையாகிய)
கடற்பரப்பானது  பவளக்கொடிகளாகிய  காடுகளையுடைய  பாற்கடலை
ஒத்துத் தோன்றியது.
 

                                                 (181)
 

8622.விண்ணில் சென்றது, கவிக் குலப் பெரும் படை வெள்ளம்;
கண்ணில் கண்டனர் வானவர், விருந்து எனக் கலந்தார்,
உள் நிற்கும் பெருங் களிப்பினர், அளவளாய் உவந்தார்;
‘மண்ணில் செல்லுதிர், இக் கணத்தே’ எனும் மனத்தார்.
 

கவிக்குலப்  பெரும்படை  வெள்ளம்  விண்ணில்  சென்றது -
வானரகுலப்பெரும்  படையாகிய  வெள்ளம்   (மண்ணில்  உயிர்துறந்து
தேவர்களாகி)  விண்ணுலகிற்  சென்றது; வானவர் கண்ணில் கண்டனர்
விருந்து  எனக்  கலந்தார்
 -  (அதனைத்) தேவர்கள் தம் கண்களாற்
கண்டவர்களாய்   விருந்தினர்என    (அன்பினாற்)    கலந்தவர்களாய்;
உள்நிற்கும்    பெருங்களிப்பினர்   -   உள்ளத்தில்   நிலைபெற்ற
பெருங்களிப்பினை   உடையவர்களாய்; அளவளாய்   உவந்தார்  -
(அவர்களோடு)  அளவளாவி  மகிழ்ந்தார்கள்; இக்கணத்தே மண்ணில்
செல்லுதிர்
- ‘(நீங்கள், எம்பொருட்டு) இப்பொழுதே’ மண்ணுலகத்திற்கு
(மீண்டு)    செல்வீராக;    என   வலித்தார்    -   எனவற்புறுத்தி
வேண்டினார்கள்.
 

                                                 (182)