| 8623. | ‘பார் படைத்தவன் படைக்கு ஒரு பூசனை படைத்தீர்; நீர் படக் கடவீர்அலீர்;-வரி சிலை நெடியோன் பேர் படைத்தவற்கு அடியவர்க்கு அடியரும் பெறுவார், வேர் படைத்த வெம் பிறவியில் துவக்குணா, வீடு. |
வரிசிலை நெடியோன் - வரிந்து கட்டப்பெற்ற வில்லினை உடையோனாகிய இராமபிரானது; பேர்படைத்தவர்க்கு - பெயரைத் தரித்தவர்களுக்கு; அடியவர்க்கு அடியரும்- அடித்தொண்டுபட்டார்க்கு அடியவராயினாரும்; வேர்படைத்த வெம்பிறவியில் - (வினையாகிய) வேரூன்றிட வெம்மையான பிறவியினால்; துவக்குணா வீடு பெறுவர் - பிணிக்கப்படாது, வீடு பேற்றினைப் பெறுவர்; (என்றால்); நீர்படக் கடவீர் அலீர் - (இராமபிரானது சேவையிலிருக்கின்ற) நீங்கள் (இங்ஙனம் அகாலமாக) இறக்கும் தன்மை உள்ளவர்களல்லீர்; பார்படைத்தவன் படைக்கு - இவ்வுலகைப் படைத்த பிரமதேவனுடைய பாடையாகிய பிரமாத்திரத்திற்கு; ஒரு பூசனை படைத்தீர் - செய்யத்தக்கதொரு வழிபாட்டினைச் செய்தவராய் (நும் உடம்பைத் துறந்து) இவ்விடம் வந்தீர்கள்! |
(183) |
| 8624. | ‘நங்கள் காரியம் இயற்றுவான் உலகிடை நடந்தீர்; உங்கள் ஆர் உயிர் எம் உயிர்; உடல் பிறிது உற்றீர்; செங் கண் நாயகற்காக வெங் களத்து உயிர் தீர்ந்தீர்; எங்கள் நாயகர் நீங்கள்’ என்று இமையவர் இசைத்தார். |
‘நங்கள் காரியம் இயற்றுவான் - (தேவர்களாகிய) நம்முடைய செயல்களை நிறைவேற்றுதற்காக; உலகிடை நடந்தீர் - நிலவுலகில் சென்று பிறந்தீர்கள்; உங்கள் ஆர் உயிர் எம் உயிர் - உங்களுடைய அரிய உயிர் எம்முடைய உயிரே; உயிர் பிறிது உற்றீர் - உடம்பு (மட்டும்) வேறாகப் பெற்றுள்ளீர்கள்; செங்கண் நாயகற்காக - (தாமரைபோலும்) சிவந்த கண்களை உடைய இராமபிரான்பொருட்டு; வெங்களத்து உயிர் தீர்ந்தீர் - கொடுமை மிக்க போர்க்களத்தில் உயிர் நீங்கப் பெற்றீர்; எங்கள் நாயகர் நீங்கள்’ - எம்முடைய இறைவர் நீங்களே; என்று இமையவர் இசைத்தார் - என்று தேவர்கள் (வானரவீரரைப்) புகழ்ந்து பாராட்டினர். |
(184) |