இந்திரசித்தன் தந்தையின் இருப்பிடம் சென்று செய்தி சொல்லுதல் |
| 8625. | ‘வெங் கண் வானரக் குழுவொடும், இளையவன் விளிந்தான்; இங்கு வந்திலன், இராமன் இப்போது’ என இகழ்ந்தான்; சங்கம் ஊதினன்; தாதையை வல்லையில் சார்ந்தான்; பொங்கு போரிடைப் புகுந்துள பொருள் எலாம் புகன்றான். |
‘வெங்கண் வானரக் குழுவொடும் - ‘வெகுளி மிக்க கண்களை உடைய வானரக் கூட்டத்துடன்; இளையவன் விளிந்தான் - இலக்குவன் இறந்து பட்டான்; இராமன் இப்போது இங்கு வந்திலன்’ - (அவன் தமையனாகிய) இராமனோ (யான் பிரமாத்திரம் விடுத்த இப்பொழுது) இப்போர்க்களத்திடத்து வந்து சேர்ந்திலன்’; என இகழ்ந்தான் - என்று இகழ்ந்தவனாகிய இந்திரசித்து; சங்கம் ஊதினான் - (வெற்றிச்) சங்கினை ஊதினான்; தாதையை வல்லையில் சார்ந்தான் - (பிறகு) தன்தந்தையாகிய இராவணனை விரைவிற் சென்றடைந்து; பொங்கு போரிடை - எழுச்சி மிக்க போரின்கண்; புகுந்துள பொருள் எலாம் புகன்றான் - விளைந்துள்ள நிகழ்ச்சிகளை எல்லாம் எடுத்துரைத்தான். |
(185) |
‘இராமன் இறந்திலனோ?’ என்ற இராவணன் வினாவும் இந்திரசித்தன் விடையும் |
| 8626. | ‘இறந்திலன்கொலாம் இராமன்?’ என்று இராவணன் இசைத்தான்; ‘துறந்து நீங்கினன்; அல்லனேல், தம்பியைத் தொலைத்து, சிறந்த நண்பரைக் கொன்று, தன் சேனையைச் சிதைக்க, மறந்து நிற்குமோ, மற்று அவன் திறன்?’ என்றான், மதலை. |
“இறந்திலன் கொலாம் இராமன்?” - (இந்திரசித்தன் கூறியவற்றைக் கேட்டபின்பு) ‘இராமன் இறக்கவில்லையோ?’ என்று இராவணன் இசைத்தான் - என்று (மகனைப்பார்த்து) இராவணன் கேட்டான்; (அதற்கு); ‘துறந்து நீங்கினான்’ - |