பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 587

‘அவ்விராமன்     போர்க்களத்தை    விட்டு   எங்கேயோ   சென்று
விட்டான்;  அல்லனேல்  -  அங்ஙனம்  செல்லாதிருந்திருப்பானாயின்;
தம்பியைத்  தொலைத்து  -  அவனுடைய  தம்பியாகிய இலக்குவனை
உயிர்  நீங்கச்  செய்து;  சிறந்த  நண்பரைக் கொன்று - அவனுக்குச்
சிறந்த  நண்பர்களாயிருந்தோரை  எல்லாம் கொன்று; தன்சேனையைச்
சிதைக்க
    -    அவன்றன்னுடைய    சேனையையும்    சிதைத்த
(பிரம்மாத்திரம்);   மற்று   அவன்   திறம்  -  மற்று  அவ்விராமன்
பக்கத்தும்;  மறந்து நிற்குமோ - (கொல்லாமல்) மறந்து நிற்பதுண்டோ?
என்றான்  மதலை  -  என்று  மறுமொழி கூறினான்;  மைந்தனாகிய
இந்திரசித்து.
 

                                                 (186)
 

8627.‘அன்னதே’ என, அரக்கனும் ஆதரித்து அமைந்தான்;
சொன்ன மைந்தனும், தன் பெருங் கோயிலைத்
                               தொடர்ந்தான்;
மன்னர் ஏவலின் போயினன், மகோதரன் வந்தான்;
எனனை ஆளுடைய நாயகன் வேறு இடத்து இருந்தான்.
 

அன்னதே   என - (நீ கூறிய) அதுவே நிகழ்ந்திருத்தல் வேண்டும்
என்று  கூறி;  அரக்கனும்  ஆதரித்து  அமைந்தான் -  இராவணன்
(தன்மகன்   கூறியதை)   உடன்பட்டு  ஏற்றுக்கொண்டான்;   சொன்ன
மைந்தனும்
 -  (நிகழ்ந்தவற்றைச்)  சொன்ன  இந்திர  சித்தும்;   தன்
பெருங்   கோயிலைத்     தொடர்ந்தான் 
 -    தனது    பெரிய
மாளிகையினை  அடைந்தான்;   மன்னன்   ஏவலின்  போயினன் -
இராவணன் ஏவலால் முன்பு  போருக்குச்   சென்றவனாகிய;மகோதரன்
வந்தான்
    -   மகோதரனும்     (மீண்டு   தன்  இருப்பிடத்திற்கு)
வந்து   சேர்ந்தான்;   என்னை   ஆளுடை   நாயகன் -  என்னை
அடிமையாக  உடைய   இறைவனான     இராமன்; வேறு   இடத்து
இருந்தான்
   -    (தெய்வப்படைக்கலங்களுக்கு  வழிபாடு   செய்து
கொண்டு)  வேறோர் இடத்தில் தங்கி இருந்தான்.
 

‘என்னை     ஆளுடை நாயகன்’ என்றவிடத்துக் கவிக்கூற்றாயிற்று.
இதனால்    கம்பர்    இராமபிரானையே    வழிபடு    தெய்வமாகக்
கொண்டிருக்கக்கூடுமெனச்     கூற     இடனாயிற்று.      ‘என்னை
ஆளுடையவன்’   (கம்ப.   194)   என்   முன்னும்  கவிக்  கூற்றாக
வந்துள்ளது.
 

                                                 (187)