பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 589

சென்று;     வெள்ள  வெங்களப்  பரப்பினை  - (குருதி) வெள்ளம்
நிரம்பிய  கொடுமை  மிக்க  போர்க்களமாகிய  பரந்த   இடத்தினைப்;
பொருக்கென விழித்தான் - திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான்.
 

தனக்கென  ஒருவடிவில்லாத இருள் செறிவு மிகுதியால் கையினால்
அள்ளி  எடுத்து  உட்  கொள்ளத்தக்கவாறு  தோன்றியதால், ‘அள்ளி
நுங்கலாம்   ஆரிருட்   பிழம்பு’   என்றார்.   தள்ளில்   தாமரை -
எவ்விதித்தும்  குறை  கூறித்தள்ளவியலாத  தாமரை என்றவாறு, தான்
விட்டுச்சென்ற  பொழுது இருந்ததைப் போலல்லாமல் குருதி வெள்ளம்
நிறைந்து  கொடுமையாகக்  காட்சியளித்ததால்  திடுக்கிட்டு  விழித்துப்
பார்த்தான் என்பதாம்.
 

                                                 (189)
 

        வீழ்ந்து   கிடக்கும்   சுக்ரீவன்  முதலானோரைத்  தனித்தனி
                                     கண்டு இராமன் வருந்துதல்

 

8630.நோக்கினான் பெருந் திசைதொறும்; முறை முறை நோக்கி,
ஊக்கினான்; தடந் தாமரைத் திரு முகத்து உதிரம்
போக்கினான்; நிணப் பறந்தலை அழுவத்துள் புக்கான்;
காக்கும் வன் துணைத் தலைவரைத் தனித் தனி கண்டான்.
 

நோக்கினான்     -  (அங்ஙனம்  போர்க்களத்தை)    விழித்துப்
பார்த்தவனாகிய  இராமபிரான்;  பெருந்திசை  தொறும் முறை முறை
நோக்கி
 -  திசையிடங்கள்  தோறும்  அடுத்தடுத்து   உற்றுப்பார்த்து;
ஊக்கினான்  -  (அங்குள்ள  அவலக் காட்சிகளைக் கண்டு)  முயன்று
மேற்சென்றவனாய்;  தடந்தாமரைத்  திரு  முகத்து - விரிந்த பெரிய
செந்தாமரை  மலர்  போலும்  (தன்)  அழகிய  முகத்தின்   கண்ணே;
உதிரம்    போக்கினான்    -    உதிரத்தை   வெளிப்படுத்தினான்;
நிணப்பறந்தலை    அழுவத்துள்   புக்கான்  -   நிணம்  நிறைந்த
போர்க்களப்   பரப்பினிடத்தே  புகுந்தான்;  காக்கும்  வன் துணைத்
தலைவரை
- (தன் சேனையைக்)  காத்தற்றொழிலை மேற்கொண்டிருந்த
வலிமை   வாய்ந்த   துணையாயமைந்த    (வானரத்) தலைவைர்களை;
தனித்தனி  கண்டான் -  (ஒவ்வொருவராகத்)  தனித்தனியே  சென்று
பார்த்தான்.
 

ஊக்குதல்  -  முயலுதல், முயன்று  மேற்  செல்லுதல். இராமபிரான்
போர்க்களமெங்கும் தன் வீரர்கள் மாண்டு கிடத்தலைக் கண்டு முகம்