தானோ?’ அரக்கன் வில் உதைத்த - அரக்கனுடைய (இந்திரசித்தினுடைய) வில்லினின்று செலுத்திய; அடல் கடந்த போர் வாளி - வலிமை வாய்ந்த போர்த்தொழிற்குரிய அம்புகள்; உனை, உடல் கடந்தனவோ? - உனது உடம்பினை ஊடுருவி அப்பாற் சென்றனவோ?” என்று ஆகுலித்து அழுதான் - என்று கூறி (வாய்விட்டு அரற்றி) இரைந்து அழுதான் (இராமன்). | (192) | | 8633. | ‘முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும், பின்னைச் சானகி உதவியும், பிழைத்தன; பிறந்த புன்மைச் செய் தொழில் என் வினைக் கொடுமையால் புகழோய் என்னைப் போல்பவர் ஆர் உளர், ஒருவர்?’ என்று இசைத்தான். | புகழோய் - புகழத்தக்க பெருமையுடையோனே! பிறந்த புன்மை செய் தொழில் - (என்னுடன்) தோன்றிய இழிந்த செய் தொழிலுக்குக் காரணமாகிய; என்வினைக்கொடுமையால் - எனது தீவினையின் கொடுமையால்; முன்னைத் தேவர்தம் வரங்களும் - முன்பு (உனக்குத்) தேவர்கள் கொடுத்த வரங்களும்; முனிவர்தம் மொழியும் - முனிவர்கள் அளித்த வாழ்த்துரையும்; பின்னைச் சானகி உதவியும் - பின்பு (சனகன் மகளாகிய) சானகி (நீ இலங்கையில் அவளைக் கண்ட காலத்துச்) செய்த உதவியும்; பிழைத்தன - ஆகிய இவையெல்லாம் (இன்னு உன்னைக் காத்தற்கு முடியாதனவாய்) பயனற்றவாய் ஒழிந்தன; என்னைப் போல்பவர் ஒருவர் ஆர் உளர் - (இதற்குக்காரணமாய்) என்னைப் போன்று (உயிர் தாங்கி) உள்ளவர் ஒருவர் (என்னையன்றிப் பிறர் யாருளர்? என்று இசைத்தான் - என்று (தன்னை வெறுத்துக்) கூறினான் (இராமன்). | தேவர்தம் வரங்களாவன; “உலகமுள்ளளவும் பெறுதி பெயராப் புகழ்” (உத்தர. அனுமப் - 34) என இந்திரனும்.” ‘என்வில்லார் கரத்திற் சத கூற்றில் ஒரு கூறுனக்கு மேவிடுக, எல்லா விஞ்சைகளும் தரிக்க இசைந்த சக்தியுண்டாக, நல்லாய் கொள் நீ’ தருகின்றேன், (உத்தர - அனுமப். 34) எனச் சூரியனும், ‘இரணபூமியிடை நேர்ந்தால் என் பாசத்தால் மரணமில்லை உனக்கு’ என வருணனும், ‘என் தண்டத்தால் முரணின் மிகு மாருதி ஆவி முடியா தொழிக’ (உத்தர. அனும - 36) என |
|
|
|