பக்கம் எண் :

592யுத்த காண்டம் 

இயமனும்,     ‘என்கதையால்    நீ    கூற்றின்    சூழல்    உறாய்’
எனக்குபேரனும்,   ‘என்கர   மூவிலையினாலும்  என்னாலும்  மாருதி
ஆவியகாலாதொழிக’  (உத்தர  -  அனுமப்  - 37) என ஈசனும், ‘என்
பிரம தண்டால் தானும் சாவின்றி மேதாவியுமாய், ஒரு நாளும் விளியா
நாளும் உறுக’ எனப் பிரமதேவனும், ‘தேவர்படையாற் செருக்களத்தில்
வாதாமகன்  சாவொழிக’  (உத்தர  -  அனுமப்  -  38) எனவானோர்
தச்சனும்    கொடுத்த    வரங்கள்,    ‘வந்து   நின்ற   மறையோர்
முனிவரருளாளர்    ஆனோரெல்லாமனுமனுக்கழிவிலாத    வரமளிப்ப
(உத்தர   -   அனுமப்   -  39)  என  முனிவர்  ஆசி  நல்கியமை
ஆகியவற்றைக்    காணலாகும்.   சீதையை   அசோகவனத்தில்கண்டு
இராமனது  மணியாழியைப் பெற்றுத் துயர் தவிர்ந்த சீதை அனுமனை
நோக்கி,  மனமகிழ்ந்து  அளித்துதவிய (கம்ப. 5299) இறவாமையாகிய
பெருவரம்.
 

                                                (193)
 

8634.‘புன் தொழில் புலை அரசினை வெஃகி, என் பூண்டேன்?
கொன்று ஒருக்கினேன், எந்தையை; சடாயுவைக் குறைத்தேன்;
இன்று ஒருக்கினேன், இத்தனை வீரரை; இருந்தேன்!
வன் தொழிற்கு ஒரு வரம்பும் உண்டாய் வரவற்றோ?
 

புன்    தொழில் புல அரசினை - சிறுமையான செயலால் இழிந்த
அரச  பதவியினை;  வெஃகி  என்  பூண்டேன்  -  விரும்பி  என்ன
(பெறுதற்கரிய  பேற்றினைப்) பெற்று விட்டேன்? எந்தையைக் கொன்று
ஒருக்கினேன்
 -  (அதனால்)  என்   தந்தையைக்  கொன்றழித்தேன்;
சடாவுவைக்  குறைத்தேன்  -  (என்தந்தைக்குச்  சமமான) சடாயுவை
வீழ்த்தினேன்;   இத்தனை  வீரரை  இன்று  -  (இப்போர்க்களத்தில்)
இத்தனை  வானரவீரர்களையும்  இன்று;  ஒருக்கினேன் இருந்தேன் -
உயிர்  நீங்கச்  செய்தேனாய்  (நான்மட்டும்  உயிர் தாங்கி) இருந்தேன்;
வன்தொழிற்கு  -  (இத்தகைய  என்னுடைய)  கொடிய செயல்களுக்கு;
ஒருவரம்பும்  உண்டாய்  வரவற்றோ? - ஓர்  எல்லையும் உண்டாகி
அமையவல்லதோ? (இல்லை என்றபடி).
 

‘புன்தொழிலால்   புலைத்தன்மையை உடைய அரசு’ எனக் கூட்டிப்
பொருள்  கொண்டால்,  ஆளுவோன்  தன்னால்  ஆளப்  பெறுகின்ற
உயிர்      வர்க்கங்களின்       வினைப்பந்தங்களில்       தானும்
தொடர்புடையவனாகி  நிற்றலால்  புன் தொழிலாகவும், அரச செல்வம்
பொறிபுலன்களுக்கேற்ற  போக  நுகர்ச்சிகளை  வேண்டிய   வண்ணம்
கொடுக்கும் தன்மையதாகலின் புலைத் தன்மையதாகவும் கொண்டு