பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 593

பொருள்கொள்ளலாம்.     அங்ஙனமின்றி,     ‘புலை     அரசினை
வெஃகுதலாகிய  புன் தொழில்’ எனக் கூட்டியும் பொருள்கொள்ளலாம்.
தான்  அரசினை  ஏற்க ஒப்பியதை இங்ஙனம் பல்வேறு இடங்களிலும்
இராமன்   கடிந்து  கூறிக்  கொள்வதை  நூலின்  பிற  பகுதிகளிலும்
காணலாம்.
 

                                                (194)
 

8635.‘தமையனைக் கொன்று, தம்பிக்கு வானரத் தலைமை
அமைய நல்கினென், அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன்;
கமை பிடித்து நின்று, உங்களை இத்துணைக் கண்டேன்;
சுமை உடல் பொறை சுமக்க வந்தேன்’ எனச் சொன்னான்.
 

தமையனைக்     கொன்று -  அண்ணனைக் கொன்று; தம்பிக்கு
வானரத்தலைமை
 -  தம்பிக்கு (சுக்கிரீவனுக்கு)  வானரகுல அரசனாம்
தன்மையை;   அமைய   நல்கினென்,   -   பொருந்தும்படி   தந்து;
அடங்கலும் அவிப்பதற்கு அமைந்தேன் -(நன்மை செய்வது போன்று
அவ்வானவர்குலம்)    முழுமையும்    அழிப்பவனாகி   அமைந்தேன்;
கமைபிடித்து நின்று, - பொறுமையைக் கடைபிடித்து நின்று; உங்களை
இத்துணை      கண்டேன்
     -      உங்களை      இவ்வளவு
துன்பத்திற்குள்ளாக்கினேன்;   சுமை   உடல்  பொறை  -  பூமிக்குப்
பாரமாகவுள்ள  எனது உடம்பின் சுமையினை; சுமக்க வந்தேன்’ எனச்
சொன்னான்
 - சுமத்தற்கென்றே (இவ்வுலகிற்)  பிறந்தேன்’ என்று கூறி
(இராமன்) வருந்தினான்.
 

                                                 (195)
 

8636.விடைக் குலங்களின் நடுவண் ஓர் விடை கிடந்தென்ன,
கடைக்கண் தீ உக, அங்கதக் களிற்றினைக் கண்டான்;
‘படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன், பழி பார்த்து,
அடைக்கலப் பொருள் காத்தவாறு அழகிது’ என்று அழுதான்.
 

விடைக்குலங்களின் நடுவண் -  ‘எருதுக் கூட்டங்களின் நடுவே;
ஓர் விடை கிடந்தென்ன - ஒப்பற்ற தோர் இடபம்