கிடந்தாற்போல (ப்பெருவீரர்களின் நடுவிலே கிடக்கும்); அங்கதக் களிற்றினை - அங்கதனாகிய யானையை;கண்டகடைதீ உகக் கண்டான் - (இராமன் தன்) கண்களின் கடையினின்றும் தீப்பொறி பறக்குமாறு பார்த்தான்;படைக்கலங்களைச் சுமக்கின்ற பதகனேன் - (பகைவரால் துன்புறாது அடைந்தாரைப் பாதுகாக்கும் நோக்குடன்) ஆயுதங்களைச் சுமந்து கொண்டுள்ள தீவினையாளனாகிய யான்; பழி பார்த்து-பழி (நேராமல்) நோக்கி; அடைக்கலப் பொருள் காத்தவாறு - (என்னிடத்தில் ஒப்புவித்த) அடைக்கலப்பொருளைப் பாதுகாத்ததிறம்; அழகிது’ என்று அழுதான் - மிகவும் அழகாயுள்ளது’ என்று கூறி அழுதான். |
அடைக்கலப்பொருள் அங்கதன். அவனை, இறக்கும் நிலையில் வாலி, “பொய்யுடை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவ... உன் கையடையாகும்” எனக் கூறி அடைக்கலமாகத் தந்தமை (கம்ப.4092) முன்பு காண்க. |
(196) |
இலக்குவனைக் கண்டு இராமன் அடைந்த துயரம் |
| 8637. | உடரிடைத் தொடர் பகழியின் ஒளிர் கதிர்க் கற்றைச் சுடருடைப் பெருங் குருதியில், பாம்பு எனச் சுமந்த மிடருடைப் பண மீமிசை, தான் பண்டை வெள்ளக் கடரிடைத் துயில்வான் அன்ன தம்பியைக் கண்டான். |
உடரிடைத் தொடர் பகழியின் - உடம்பின் இடையே துளைத்து ஊடுருவிய அம்புகளின்; ஒளிர்கதிர்க் கற்றை - ஒளிவிட்டு விளங்கும் ஒளித் தொகுதியான; சுடருடைப் பெருங் குருதியில் - சுடரினையுடைய பெரிய குருதியினிடத்தே; பாம்பு எனச் சுமந்த - பாம்பெனப் பகருமாறு சுமந்து அக்காட்சி; மிடருடைப் பணமீமிசை - வலிமையை உடைய ஆதிசேடன் என்னும்) பாம்பின் மேல்; பண்டை வெள்ளக் கடரிடை - பழமையான பாற்கடலின் கண்ணே; துயில்வான் தான் அன்ன - துயில்பவனாகிய தன்னை நிகர்த்திருக்க (க்கிடைக்கும்); தம்பியைக் கண்டான் - இளவலான இலக்குவனை இராமபிரான் பார்த்தான். |
பணம் என்பது படத்தினை உடைய பாம்பினைக் குறித்தது. |
(197) |