பக்கம் எண் :

596யுத்த காண்டம் 

நிலைபெயர்த்து      அசைத்திலன்;  உயிர்  பிரிந்திலன் - (ஆனால்)
உயிர்மட்டும்  நீங்கப்  பெறாதவனாயினான்;  விண்ணோர்  ‘அயிர்த்து
இலன்கொல்?’   என்று   அஞ்சினர்
 -  (அந்நிலையில்)  தேவர்கள்
(அப்பிரான்) ‘உயிரொடுங்கினானோ’ என அச்சமுற்றனர்.
 

                                                (199)
 

8640.தாங்குவார் இல்லை; தம்பியைத் தழீஇக்கொண்ட தடக் கை
வாங்குவார் இல்லை; வாக்கினால் தெருட்டுவார் இல்லை;
பாங்கர் ஆயினார் யாவரும் பட்டனர்; பட்ட
தீங்குதான் இது; தமியனை யார் துயர் தீர்ப்பார்?
 

தாங்குவார் இல்லை - (அங்கு இராமபிரானை) தாங்கிக் கொள்வார்
எவரும்    இலர்;   தம்பியைத்  தழீஇக்கொண்ட   -   தம்பியாகிய
இலக்குவனைத்  தழுவிக்  கொண்டுள்ள; தடக்கை வாங்குவாரில்லை -
(இராமனது) பெரிய கையினை (ப்பிரித்து) வாங்கி எடுப்பவர்   ஒருவரும்
இலர்;  வாக்கினால்  தெருட்டுவார்  இலர் - தேறுதல்  மொழிகளால்
தேற்றுவாரும்   இலர்;   பாங்கர்  ஆயினார்  யாவரும் பட்டனர் -
(அவனுக்கு)   அணுக்கராயுள்ளோர்    அனைவரும்    இறந்துபட்டனர்;
பட்டதீங்குதான் இது - (அவனுக்கு)  உண்டாகிய துன்பம் இத்தகையது;
தமியனை  யார் துயர் தீர்ப்பார்? - (உற்றார் உறவினர் எவருமின்றித்)
தனிப்பட்டவனைத் துன்பம் தவிர்ப்பவர் எவர் உளர்?
 

                                                 (200)
 

8641.கவந்த பந்தமும், கழுதும், தம் கணவரைக் காணார்
சிவந்த கண்ணியர் தேடினர் திரிபவர் திரளும்,
உவந்த சாதகர் ஈட்டமும், ஓரியின் ஒழுங்கும்,
நிவந்த; அல்லது, பிறர் இல்லை, களத்திடை நின்றார்.
 

கவந்த  பந்தமும், கழுதும் - தலையற்ற உடம்புகளின் தொகுதியும்,
பேயும்;  தம்  கணவரைக்  காணார் - தம்முடைய கணவரைக் காணப்
பெறாமையால்;   சிவந்த   கண்ணியர்  -  (துயரத்தால்)  சிவப்பேறிய
கண்களை   உடையவராய்;   தேடினர்  திரிபவர்  திரளும்  -  தேடி
அலைபவராகிய  மகளிர்  கூட்டமும்;  உவந்த  சாதகர்  ஈட்டமும்  -
(தமக்கு  உணவாகும்  பிணங்களின்   மிகுதிகண்டு)  மகிழ்ச்சி  கொண்ட
பூதங்களின்  தொகுதியும்;  ஓரியின்  ஒழுங்கும் - நரிகளின் வரிசையும்;
நிவந்த அல்லது - மிகுந்து