பக்கம் எண் :

598யுத்த காண்டம் 

தொகையுள் நின்றவர்க்கு உள்ளது சொல்லி என்?
                                     தொடர்ந்த
பகையும் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது, பரிவால்.

 

முகையின்    நாள் மலர்க் கிழவற்கும் - மொட்டாகவில்லாமலே
புதிதாக    மலர்ந்தது   போன்ற    (திருமாலின்   உந்திக்கமலமாகிய)
தாமரையில்  வசிப்பவனாகிய  பிரமனுக்கும்;  முக்கணான் தனக்கும் -
மூன்று    கண்களை    உடையவனாகிய    உருத்திர   மூர்த்திக்கும்;
கருணையும் நலிந்த - (இராமன் படுகின்ற துயரத்தைக்  கண்ணுற்றதால்
ஏற்பட்ட)   இரக்கத்தினால்    விளைந்த  வருத்தத்தினால்;  திருமுகம்
நகையும்  நீங்கிய
 - திருமுகங்கள் மகிழ்ச்சியாகிய மலர்ச்சியின் நீங்கி
வாட்டமுற்றன;  தொகையுள்  நின்றவர்க்கு  -  (முப்பத்து  முக்கோடி
என்னும்)   எண்ணின்  அளவினை  உடையவராய்  நின்ற  (ஏனைய)
தேவர்களுக்கு; உள்ளது சொல்லியென்? - நேர்ந்த துன்பநிலையினைச்
சொல்லி  யாது  பயன்?தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் -
தொடர்ந்துள்ள    பகைமையுடன்     (அத்துயரைக்)   கண்ணுறுகின்ற
பாவத்திற்குரிய தேவதையும்; பரிவால் கலுழ்ந்தது - (தன்னிலைமறந்து)
இரக்கத்தினால் கண்ணீர் விட்டு அழுதது.
 

                                                 (203)
 

8644.அண்ணலும், சிறிது உணர்வினோடு அயாவுயிர்ப்பு அணுகிக்
கண் விழித்தனன்; தம்பியைத் தெரிவுறக் கண்டான்;
‘விண்ணை உற்றனன்; மீள்கிலன்’ என்று, அகம் வெதும்பா,
புண்ணின் உற்றது ஓர் எரி அன்ன துயரினன் புலம்பும்;
 

அண்ணலும்,     சிறிது உணர்வினோடு - பெருமை மிக்கவனாக
இராமபிரானும்   சிறிது   உணர்வுடன்;   அயாவுயிர்ப்பு   அணுகி  -
பெருமூச்சு  வரப்  பெற்றது; கண்விழித்தான் - கண்களை விழித்தான்;
தம்பியைத்   தெரிவுறக்   கண்டான்  -  தம்பியை  நன்கு  உற்றுப்
பார்த்தான்; விண்ணை உற்றனன் மீள்கிலன் என்று- (இவன் இறந்து)
விண்ணுலகடைந்தான்  (இனி)  மீளமாட்டான்’  என்று  எண்ணி; அகம்
வெதும்பா
 -  உள்ளம்  அழன்று வெம்மையெய்த; புண்ணின் உற்றது
ஓர் எரி அன்ன
- புண்ணில் நெருப்புத்