தோய்ந்தது போன்று; துயரினன் புலம்பும் - துன்பத்தினை உடையவனாகிப் (பின்வருமாறு) வருந்தி அழுபவனானான். |
(204) |
சிறிது உணர்வு பெற்ற இராமன் இலக்குவனைக் குறித்துப் புலம்புதல் |
சந்தக் கலித்துறை |
| 8645. | ‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன்; உலகு எல்லாம் தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்; கந்தன் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்; வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! |
‘எந்தை இறந்தான்’ என்றும் இருந்தேன் - எம்தந்தை (தசரதன்) இறந்தான் எனக் கேள்வியுற்றும் (இறவாது) இருந்தேன்; உலகு எல்லாம் தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன் - ‘உலகம் முழுவதனையும் (பரதனே ஆளத்) தந்தேன்’ என்ற (எனது உறுதியான) கொள்கையில் நெகிழ்ந்து நீங்கி (எனது ஆணையின் வழி பரதன் ஆளும்படி) ஆட்சியை ஏற்றுக்கொண்டவனாயினேன்; கந்தன் நீ இருந்தாய் - (இருப்பினும்) பற்றுக்கோடானவனாக நீ இருந்தாய்; தனி அல்லேன் என நின்றேன் -(ஆதலினால்) நான் தனித்துள்ளவன் அல்லேன் என எண்ணி (உறுதியுடன்) நின்றேன்; உரைகாணேன் - (இன்றோ) உனது உரையை நான் காணப் பெற்றேனில்லை; இனிவாழேன் - இனியும் நான் வாழ்ந்திருக்க மாட்டேன்; ஐயா! வந்தனன் - ஐயனே! வந்துவிட்டேன்! ஐயா! வந்தனன்! - ஐயனே! வந்துவிட்டேன்! |
(205) |
| 8646. | ‘தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே; போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய், நீயோ; யானோ, நின்னினும் நெஞ்சம் வலியேனோ? |
தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே; - (எனக்குத்) தாயும் நீயே; தந்தையும் நீயே; தவமும் நீயே; சேயோ நீயே; தம்பியும் நீயே; |