அவைள ஓர் கலக்கம் காண்பான் - அந்தச் சீதைக்கு ஒரு பெரும் கலக்கத்தை உண்டாக்கிக் காண்பதற்காக; கண்டான் - பார்த்தான். | மானக்குணம் - பெருமை மிகு பண்பு. கண்டான்....காண்பான் - தொடை முரண். | (7)
| 7639. | இட்டதோர் இரண பீடத்து, அமரரை இருக்கை நின்றும், கட்ட தோள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் தோன்ற, வட்ட வெண் கவிகை ஓங்க, சாமரை மருங்கு வீச, தொட்டது ஓர் சுரிகையாளன் இருந்தனன், இனைய சொன்னான். | தொட்டது ஓர்சுரிகையாளன் - இடையில் கட்டிய குற்றுடை வாளை உடைய இராவணன்; இட்டதோர் இரண பீடத்து - போடப்பட்டிருந்த பொன்னால் ஆகிய பீடத்தில்; அமரரை இருக்கை நின்றும் - தேவர்களைத் தங்கள் இருப்பிடத்தில் இருந்து; கட்ட தோள் கானம் சுற்ற - அப்புறப்படுத்திக் களைந்த தோள்களின் தொகுதி சூழ்ந்திருக்க; கழல் ஒன்று கவானின் தோன்ற - எடுத்துவைத்த ஒரு கால் தொடை மீது தோன்ற; வட்டவெண் கவிகை ஓங்க - வட்ட வடிவமைந்த வெண் கொற்றக் குடை தலை மீது ஓங்கிப் பிடிக்கப்பட; சாமரை மருங்கு வீச - வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட; இருந்தனன் இனைய சொன்னான் - இருந்து இச்சொற்களைக் கூறினான். | இரணம் - பொன், கட்டல் - களைதல், கானம் - தொகுதி, கவான் - தொடை. | (8) | 7640. | ‘என்றுதான், அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான், என்றுதான், இரவியோடும் வேற்றுமை தெரிவது என்பால்? என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது? என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண்டான். |
|
|
|