பக்கம் எண் :

600யுத்த காண்டம் 

திரு    நீயே - மைந்தனும் நீயே; தம்பியும் நீயே; செல்வமும் நீயே;
புகழ் பாராய், என்னை இகந்தாய் போயோ நின்றாய் - (இத்தகைய)
நீயோ புகழைக் கருதாமல் என்னை (த்தனியே)  விடுத்து (உயிர்துறந்து)
சென்றாய்;  நீயோ;  யானோ;  - (இங்ஙனம்  எனக்கு எல்லாமாகவும்
இருந்தும்     என்னைத்     தனித்துக்     கதறவிடுத்துச்    சென்ற
வன்னெஞ்சத்தால்)   நீயோ,   (அல்லது    இங்ஙனம்  எல்லாமாகவும்
எனக்கிருந்த  உன்னை இழந்தும்  உயிரோடிருக்கும் வன்னெஞ்சத்தால்)
யானோ;  நின்னினும் நெஞ்சம் வலியேனோ-(ஆராய்ந்து பார்த்தால்)
உன்னைக்  காட்டிலும்  (எனக்காக   உயிருங்கொடுத்த  உன் செயலின்
முன்) யானே வன்னெஞ்ச முடையேன்.
 

                                                 (206)
 
 

8647.‘ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்;
ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்;
ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக்
கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே?
 

ஊறா நின்ற புண்ணுடையாய்பால் - (உதிரம்) ஊறுகின்ற புண்ணை
உடைய  உன் உடம்பின் கண்ணே;  உயி்ர் காணேன் - உயிர்ப்பினைக்
காண்கிலேன்;  ஆறா  நின்றேன்;   ஆவி  சுமந்தேன்;  அழிகின்றேன் -
ஆறுதலுடையவனாய்,  உயிர்   சுமந்தவனாய்   வருந்துகின்றேன்; ஏறே!
கெடுவேன்  (ஏ)
- ஆண் சிங்கம் போன்றவனே,  (அன்பின் திறமின்றி)
கெட்டொழிவேனாகிய   நான்;  இரு கூறாக்  கீறா  நெஞ்சம்  -  (நீ
இறந்தமை  அறிந்தும்)  இரண்டு  கூறாகப்   பிளந்து  சிதையாத வலிய
நெஞ்சம்;  பெற்றெனென் அன்றோ இன்னும் உய்யினும் உய்வேன் -
(ஆதலால்) இன்னும் உயிர்தாங்கி இருப்பினும் இருப்பேன்.
 

                                                 (207)
 

8648.‘பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து
அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்!
வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தே மெலிவு
                                     எய்தி,
துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ?
 

படர்கானத்துப்  பயிலும்  - பரவிய  இடமகன்ற  காட்டினிடத்தே
பழகிவாழும்! காலம் பத்தொடு நாலும் - பதினான்கு ஆண்டு