பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 601

காலத்தில்;   அயில்கின்றேனுக்கு - (உணவினை)  உண்கின்றவனாகிய
எனக்கு;   ஆவன   நல்கி   அயிலாதாய்  -  பொருந்துவனவாகிய
உணவுகளைத்   (தேடித்)   தந்து   (நீமட்டும்)   உண்ணாதிருந்தவனே!
வெயில்  என்று  உன்னாய் - வெயில்  என்று  கருதாத  நீ; நின்று
தளர்ந்தே   மெலிவு   எய்தி
 -  (எனக்குத்   துணையாக)  நின்று
தளர்ச்சியுற்று  மெலிவினை  அடைந்து;  இன்று துயில்கின்றாயோ  -
இப்பொழுது    உறங்குகின்றாயோ?   இவ்வுறக்கம்  துறவாயோ   -
இவ்வுறக்கத்தினை விட்டு எழமாட்டாயோ?
 

                                                 (208)
 

8649.அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல்
பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ?
செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்;
உயிரோ, நானோ, ஆர் இனி உன்னோடு உறவு, ஐயா!
 

அயிரா  நெஞ்சும்  ஆவியும்  -  ஐயுறவு  கொள்ளாத  தெளிந்த
நெஞ்சமும்  உயிரும்;  ஒன்றே எனும் அச்சொல் - (தம்முட்பிரிவின்றி
ஒன்றிக்  கலந்திருத்தலால்) ஒன்றே என (உலகோர்)  கூறும் அம்மொழி;
பயிரா  எல்லை  - பொருளுள்ளதாக  ஆகாதபோது; பாதகனேற்கும்
பரிவு உண்டோ
- பாவியாகிய என்னிடம் இரக்கம் என்ற உணர்வுதான்
நிகழுமோ;  செயிரோ  இல்லா  - ஒரு  குற்றமும் இல்லாத; உன்னை
இழந்தும்  திரிகின்றேன்
 - உன்னை இழந்தபின்பும் (வருத்தமின்றித்)
திரியும்  நிலையினனாக  உள்ளேன்;ஐயா! இனி உன்னோடு உறவு -
ஐயனே!  இனி  உன்னுடன்  (உண்மையான)  உறவு; உயிரோ, நானோ,
ஆர்
- (எனது) உயிரோ, யானோ யார்?
 

                                                 (209)
 

8650.‘வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, “ஓர் விடம் அம்மா
வாழ்விக்கும்!” என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்;
சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்;
தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்?
 

வேள்விக்கு  ஏகி வில்லும் இறுத்து-(சனகன் புரிந்த) வேள்விக்குச்
சென்று சிவன் வில்லையும் ஒடித்து; ஓர்விடம்