இந்நிலையிலும் உயிர்துறவாது) இருந்தேனானால்; இந்திரசித்தே முதலாய பெருந்தேராரை - இந்திரசித்து முதலாகவுள்ள பெரிய தேர் வீரர்களாகிய பகைவர்களை; கொன்று பிழைக்கப் பெறுவேனா? - (போரிற்) கொன்று பிழைத்திருத்தலாகிய ஆற்றலைப் பெறவல்லேனா? நான் பொருந்தேன் - நான், ‘உன்னுடன் பிறந்தேன்’ எனக் கூறிக் கொள்ளுதற்கும் பொருத்தமுடையேனல்லேன்; இப்பொய்ப் பிறவிக்கும் பொறை அல்லேன் - (எனவே) இப்பொய்மைத் தன்மையுடைய பிறவியின் சுமையைத் தாங்குதற்கும் வன்மையுடையேனல்லேன்! | (216) | | 8657. | ‘மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும், “ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை, தாதாய்! காணச் சால நினைந்தேன்; தரை ஆள்வேம்; போதாய்; ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்! | தாதாய் - என் அப்பனே! மாதாவும், நம் சுற்றமும் நாடும் மறையோரும் - (நம்மை ஈன்ற) தாயும், நம் சுற்றத்தாரும், நாட்டுமக்களும், வேதியரும்; ‘ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை - (வனம் போந்தநம்மைக் குறித்து) ‘என்ன நிலையினராயினாரோ’ என்று தளர்வெய்தி (மனம் நொந்து) அழிபவரை; காணச் சால நினைந்தேன் - (அவர் தம் துயர் நீங்க) காணுதற்குப் பெரிதும் எண்ணி நிற்கின்றேன்; ஐயனே! - ஐயனே! என்னைப் பொன்முடி புனைவிப்பான் - என்னைப் பொன்னாலியன்ற முடியைப் புனைவித்தல் வேண்டி; தரை ஆள்வேம் போதாய் - நிலமாள்வதற்கு (மீண்டும் உயிர்பெற்று) வருவாயாக. | (217) | | 8658. | ‘பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே நாசமும் முற்ற இப்போதும், நடந்தேன், உடன் அல்லேன்; நேசமும் அற்றார் செய்வன செய்தேன்; நிலை நின்றேன்; தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைத் தெரியாதோ? |
|
|
|