பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 607

பாசமும்  முற்றச் சுற்றியபோதும் - நாகபாசம் முழுவதும் (உனது
உடம்பைச்)  சுற்றிய   அப்பொழுதும்;  பகையாலே  நாசமும்  முற்ற
இப்போதும் 
-  பகைவனாலே  (நம்  சேனைக்குக்) கேடு  முற்றிவிட்ட
இப்பொழுதும்; உடன்  அல்லேன்  நடந்தேன்  - உன்னுடன் துணை
நிற்பேன்   அல்லாதேனாகி   (உன்னை    விட்டுப்புறத்தே)   சென்று
விட்டேன்;நேசமும் அற்றார் செய்வன செய்தேன் - அன்பில்லாதார்
செய்வனவற்றைச்    செய்தேன்;   நிலைநின்றேன்   -   (ஆயினும்)
தளர்ச்சியின்றி  நிற்கின்றேன்;  என்கொற்ற  நலத்தை  - (இத்தகைய)
எனது  வெற்றி  நலத்தை; தேசமும்  மற்று தெரியாதோ - உலகமும்
தெரிந்து கொள்ளாதோ?
 

பாசம் - இந்திரசித்து ஏவிய நாகபாசம்.
 

                                                (218)
 

8659.‘கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள
முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்;
படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்;
ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?’
 

வீடணனுக்குக்  குலம் ஆள முடித்து ஓர் செல்வம் -  (என்னை
அடைக்கலம்  அடைந்த)  வீடணனுக்கு   அவன்   குலமுழுவதனையும்
ஆளுமாறு முடிவு செய்து ஒப்பற்ற  (இலங்கை அரசாகிய)  செல்வத்தை;
அன்றே    கொடுத்தேன்  -    (அவன்    அடைக்கலம்   புகுந்த
அந்நாளிலேயே)  அன்றே  (வாயளவில்)   கொடுத்து விட்டேன்; யான்
முடியாதே      முடிகின்றேன்
     -      நான்      (அங்ஙனம்
வாக்குறுதிகொடுத்ததனை)     நிறைவேற்றாமலேயே       இறந்துபடப்
போகின்றேன்;  படித்தேன் அன்றே  பொய்மை - பொய்மை மொழி
கூறப்  பயின்றேன் அல்லவா? குடிக்குப் பழி பெற்றேன் - (அதனால்)
என்  குடிக்குப்  பழியைத்  தேடி)ப்  பெற்றேன்;  உணர்வு  அற்றேன்
நானே  என்புகழ்  ஒடித்தேன் அன்றே
 - உணர்வற்றவனாகிய யான்
எனது புகழினை நானே சிதைத்தழித்தேன் அன்றோ?
 

                                                (219)
 

8660.என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி,
சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த,