அன்பால் உரை செய்தார் - எனச் சொல்லி (அம்முதல்வனிடத்துத் தாம் கொண்ட) பேரன்பினால் பின்வருமாறு கூறினார்கள். | புடைத்தல் - மோதி அறைதல்; கலுழ்தல் - அழுதல்; குலைதல் - நடுங்குதல்; அண்டா - அண்டம் முழுவதுமாய் நிறைந்து விளங்குபவனே! ‘வானாடும் மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும், தானாய எம்பெருமான்’ (பெரியதிருமொழி 4-1-3) என்பது திருமங்கையாழ்வார் திருவாக்கு. இறைவன் இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டவன். எனவே உன்பால் துன்புண்டோ? என வினவுகின்றனர். “இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே” (திருவா-சிவபுராணம்) என்பது மணிவாசகம். தேவர்கள் இராமபிரான் படுகின்ற துயரங்கண்டு ஆற்றாராகி, ‘துன்பமற்ற நீ எங்கள் பொருட்டால் இப்பெருந்துயர் ஏற்றாய்’ எனத்தாமும் பெருந்துயரெய்தி அப்பிரானுக்குச் சில சொல்லத் தொடங்கினர். | (221) | அறுசீர் ஆசிரிய விருத்தம் | 8662. | ‘உன்னை உள்ளபடி அறியோம்; உலகை உள்ள திறம் உள்ளோம்; பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம், பிறழாமல்; நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது அல்லால், என்னை, அடியோம் செயற்பால?-இன்ப-துன்பம் இல்லோனே! | இன்ப-துன்பம் இல்லோனே - இன்பமும் துன்பமும் இல்லாதவனே! உன்னை உள்ளபடி அறியோம் - உன் நிலையை உள்ளது உள்ளவாறு அறியும் திறம் அறியமாட்டோம்; உலகை உள்ளதிறம் உள்ளோம் - உலகினை (உள்ளும் புறமும்) நிறைந்துள்ள நின் வியாபகத் தன்மையைச் சிந்தித்துணரும் திறமுடையோம் அல்லோம்; பின்னை அறியோம், முன் அறியோம், இடையும் அறியோம் - முடிவு இதுவென்றறியோம்; முதல் இதுவென்றறியோம்; நடுவும் இதுவென்றறியோம்; நின்னை வணங்கி - (ஆதி அந்தம் நடுவென்றறிய வொண்ணாப் பரமாகிய) நின்னை வழிபட்டு; நீவகுத்த நெறியின் பிறழாமல் - நீ வகுத்தருளிய அற நெறியில் மாறுபடாமல்; நிற்கும் இது அல்லால் - நின்று |
|
|
|