உண்டோ இலையோ என்றிருந்தவள்) உயிரே மீண்டும் பெற்றாள்; தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை - குற்றம் சிறிதும் இல்லாத கற்பினை உடைய திருமகள், சேடி ஆம் பாங்கினாள் - தனக்குத் தோழியாக இருக்கத்தக்க அழகுடையவளாகிய சீதை; உற்றதனை யாரே பகர்கிற்பார் - அடைந்த மகி்ழ்ச்சி நிலையை யாரால் சொல்ல முடியும். |
தன்முன் இதுவரை நிகழ்ந்தன எல்லாம் மாயச் செயல்கள் என்று உணர்ந்த சீதையின் பெரு மகிழ்ச்சியை இப்பாடல் குறிக்கிறது. தீங்கு இலாக் கற்பு - ஆறிய கற்பு, சேடி - பணிப் பெண் எனினும் ஆம். |
(88) |
7720. | கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை; கொண்டாள், ஒரு துணுக்கம்; அன்னவனைக் கொற்றவனார் தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை உண்டாள் உடல் தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள். |
தன் கண் கடந்த தோளானை - தன் கண்ணுக்கு அடங்காத பேரழகு படைத்த தோளை உடைய இராமனையும்; கருணனை கண்டாள் - கும்பகருணனையும் முன்பு கண்டு; ஒரு துணுக்கம் கொண்டாள் - ஒப்பற்ற அச்சம் கொண்டவள் ஆகிய சீதை; அன்னவனை - அத்தகைய பேருருவும் பெருவலியும் படைத்த அவனை; கொற்றவனார் தண்டாதவாளி - வெற்றி பொருந்திய இராமபிரானது தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு; தடிந்த தனி வார்த்தை - அழித்த ஒப்பற்ற சொற்களை; உண்டாள் - மிக விரும்பிக் கேட்டு,; உடல் தடித்தாள் - உடல் பூரிப்பு அடைந்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள் - அதனால் வேறு ஒருத்தி போன்றவள் ஆனாள். |
இதுவரை அவலச் சுவை பற்றி வந்த உணர்வு முன்னுள்ள 87 ஆம் பாடல் முதல் உவகைச் சுவையாக மாறியுள்ளமை காண்க. கருணனைக் கண்டாள் - கும்பகருணனின் பேருருவத்தையும் பெருவலியையும் சொல்லக் கேட்டிருந்த சீதை அவன் இராமபிரான் முன் போர்க்களத்தில் நிற்பதைக் கற்பனையால் கண்டாள் என்க. |
(89) |