பக்கம் எண் :

610யுத்த காண்டம் 

ஒழுகுதலையின்றி;   அடியோம்   செயற்பால   என்னை?  - நின்
அடியோங்களாகிய எங்களாற் செய்யத் தக்கனயாவை உள்ளன?
 

உன்னை      உள்ளபடி    அறியோம்   -    “உணர்ந்தார்க்கு
உணர்வறியோன்”    (திருக்கோவை-9)    இறைவனின்    வியாபகத்
தன்மையை   அறிய   முடியாமை   குறித்து   ‘உலகை  உள்ளதிறம்
உள்ளோம்’ எனப்பட்டது. உள்ளோம் - நினைக்கமாட்டோம்.
 

‘திடவிசும் பெரிவெளி நீர்நில மிவைமிசை
படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும்
உடல்மிசை யுயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியு ளிவையுண்ட சுரனே!’

 

                                (திருவாய்மொழி - 1-1-7)
 

எனவரும்     நம்மாழ்வார் திருவாக்கு இங்கு  நினைக்கத் தக்கது.
சிற்றறிவாகிய  உயிர்,  பரம்பொருளின்  முழுமையை  அறியவியலாது.
எனவே,  அப்பரம்பொருள்  வகுத்த  வழி  பிறழாமல்  ஒழுகுதலன்றி
வேறொன்றும் செயற்கரியதாகும்.
 

                                               (222)
 

8663.‘”அரக்கர்   குலத்தை   வேர்  அறுத்து,  எம்  அல்லல்
                            நீக்கி அருளாய்” என்று
இரக்க, எம்மேல் கருணையினால், ஏயா உருவம் இவை
                                          எய்தி,
புரக்கும் மன்னர் குடிப் பிறந்து, போந்தாய்! அறத்தைப்
                                பொறை தீர்ப்பான்,
கரக்க நின்றே, நெடு மாயம் எமக்கும் காட்டக்கடவாயோ?
 

அரக்கர்     குலத்தை வேர் அறுத்து - (இரக்கமற்றவர்களாகிய)
அரக்கரினத்தை  வேருடன்  அறுத்துக் களைந்து; எம் அல்லல் நீக்கி
அருளாய்  என்று
 -  எம்முடைய  துன்பங்களை  நீக்கியருள்வாயாக
என்று;   இரக்க,   எம்மேல்  கருணையினால்  - (யாம்  நின்னைக்)
குறையிரந்து வேண்ட, எம்மேல் (நீவைத்த) பேரருளால்;  ஏயா உருவம்
இவை  எய்தி  
-  (நினக்கு)  பொருந்தாத  மானிடவடிவங்களை ஏற்று;
அறத்தைப்  பொறை  தீர்ப்பான்  - அறத்தின்  (பொறுக்க முடியாத)
பாரமாகிய  தீமைகளைப்  போக்குதற்காக;  புரக்கும்  மன்னர்  குடிப்
பிறந்து  போந்தாய்
 - (உலக உயிர்களைக்) காக்கும் மன்னர்குலத்தில்
அவதரித்து  இங்குவந்தாய்;  கரக்க  நின்றே நெடுமாயம் - (இவ்வாறு
எமது  குறை தீர்க்க வந்த நீ நின் இறைமைத் தன்மை)  மறைய  நின்று
நினது நெடிய