படங்கொள் பாயும் பூவணையும் தருவாய் மதுரைப் பரமேட்டி" என்பது பரஞ்சோதி திருவிளையாடற் புராணம். உள்ளே உளை - என்றது இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்திருக்கும் ‘அந்தர்யாமி’ நிலையினை, புறத்து உளை - என்றது அவனது வியாபக நிலையினை, திருமால் தன்னிடத்தே உலகுயிர்களைப் படைத்து அவற்றைத் தன்னுள்ளே மீளவும் ஒடுக்கிக் கொள்ளுதற்குச் சிலந்திப் பூச்சி தன் வாயின் நூலால் கூடியற்றி அந்நூலினை மீளவும் தன்னுட்சுருக்கிக் கொள்ளுதலை உவமையாகக் கூறுவர் வைணவ சிந்தாந்திகள். இதனை, | சின்னூல் பலபல வாயா லிழைத்துச் சிலந்தி பின்னும் அந்நூ லருந்தி விடுவது போல அரங்கரண்டம் பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே! | எனத்திருவரங்கத்து மாலை (18) யும் குறிப்பிடுதல் காணலாம். இறைவன் தான் எவ்வித மாறுபாட்டிற்கும் உட்படாமல் உலகங்களை உருவாக்கிக் காத்தும் அழித்தும் நிற்கின்ற நிலை சிலந்திப் பூச்சியின் தன்மையோடு ஒப்புமைப் படுத்திப் பேசப் பெற்றது. | (225) | 8666. | ‘துன்ப விளையாட்டு இதுவேயும், உன்னைத் துன்பம் தொடர்பு இன்மை, இன்ப விளையாட்டு ஆம்; எனினும், அறியாதேமுக்கு இடர் உற்றால், அன்பு விளையும், அருள் விளையும், அறிவு விளையும், அவை எல்லாம்,- முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடித்தால் அன்றி, முடியாவே. | முன்பு பின்பு நடு இல்லாய்-தோற்றம் நிலை இறுதி இல்லாதவனே! துன்ப விளையாட்டு இதுவேயும் - (நீ மேற்கொண்ட) இச்செயல் துன்பத்தைத் தரும் விளையாட்டாம், ஆயினும்; உன்னைத் துன்பம் தொடர்பின்மை - (இறைவனாகிய நின்னை) அத்துன்பம் தொடர்தல் இல்லாமையால்; இன்பவிளையாட்டு ஆம் - இன்பத்தைத் தரும் விளையாடலே ஆம்; எனினும் அறியாதே முக்கு இடர் - ஆயினும் (நின் இயல்பினை) அறியாதேமாகிய எங்களுக்குத் துன்பத்தையே தருவதாயிற்று;உற்றால் அன்பு விளையும்,அருள் விளையும், அறிவு விளையும் - (நீ செய்த) இச்செயலால் (எங்கள்உள்ளத்தி்ல்) அன்பு உண்டாகும், அருள் உண்டாகும், ஞானம் உண்டாகும்; அவையெல்லாம் முடித்தால் அன்றி முடியாவே - அத்தகைய பயன்களெல்லாம் |
|
|
|