பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 615

8668.‘அம்பரீடற்கு அருளியது, அயனார் மகனுக்கு அளித்ததுவும்,
எம்பிரானே! எமக்கு இன்று பயந்தாய் என்றே ஏமுறுவேம்;
வெம்பு துயரம் நீ உழக்க, வெளி காணாது மெலிகின்றேம்;
தம்பி   துணைவா!   நீ   இதனைத்   தவிர்த்து,   எம்
                            உணர்வைத் தாராயோ?’*
 

எம்பிரானே!-எம்முடைய இறைவனே! அம்பரீடற்கு அருளியதும்
-  அம்பரீடன்  என்பானுக்கு  அருள்  புரிந்ததும்; அயனார்மகனுக்கு
அளித்ததுவும்
 -  பிரம  தேவருயை  மகனான உருத்திர மூர்த்திக்கு
அருள்   வழங்கியதும்,  (ஆகிய  நின்  அருளை);  எமக்கு  இன்று
பயந்தாய்   என்றே   ஏமுறுவேம்
-  எங்களுக்கும்   இப்பொழுது
கொடுத்தாய்  என்று  (நினது) பாதுகாப்பினை நாடி அடைதற்கு உள்ள
யாங்கள்;   வெம்புதுயரம்   நீ  உழக்க -  மனம்  வெதும்புதற்குக்
காரணமான   துன்பத்தை   நீ   அடைந்தமையால்;  வெளிகாணாது
மெலிகின்றேம்
  -  (துன்பஇருளைவிட்டுச்  செல்லும்)  வழிகாணாது
தளர்ந்து வருந்துகின்றோம்;தம்பிதுணைவா! - தம்பிக்கு துணைவனே!
நீ   இதனைத்   தவிர்த்து,  எம்  உணர்வைத்  தாராயோ - நீ
(மேற்கொண்டுள்ள)  இத்துயரத்தை  நீக்கி  (உணர்விழந்த) எங்களுக்கு
நல்லுணர்வினைத் தந்தருள மாட்டாயா?
 

ஏமுறுதல் - பாதுகாப்பினை அடைதல், வெம்புதுயரம் - கண்டோர்
செய்வதறியாது   மனம்   வெதும்புதற்குரிய   பெருந்துயர்.  இராமன்
இலக்குவன்  மீது  பேரன்பினன் ஆதலால், இவ்விடம் நோக்கி ‘தம்பி
துணைவா’ என அழைக்கப் பெறுகின்றான்.
 

                                                (228)
 

        இராவணனிடம் தூதர், ‘உன்பகை முடிந்தது’ என அறிவித்தல்
 

8669. என்ப  பலவும்   எடுத்து   இயம்பி,   இமையாதோரும்
                                  இடர்உழந்தார்;
அன்பு மிகுதியால், ஐயன் ஆவி உள்ளே அடங்கினான்,