| துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்; புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம் புகுந்தார். |
என்ப பலவும் எடுத்து இயம்பி - என மேற்குறித்த பலவற்றையும் எடுத்துக்கூறி; இமையாதோரும் இடர் உழந்தார் - கண்ணிமையாதவராகிய தேவர்களும் துன்புற்று வருந்தினார்கள்; ஐயன், துன்பமனிதர் கருமமேபுரிய - இறைவனாகிய இராமன் துன்பத்தில் உழலும் மனிதர்களுக்குரிய செயல் முறையினையே புரிவதாக; முன்பு துணிந்தமையால் - தான் முன்பு துணிந்து மேற்கொண்ட அவதாரச் செய்கை காரணமாக;அன்பு மிகுதியால் ஆவி உள்ளே அடங்கினான் - (இலக்குவன் பால் வைத்த) அன்பு மிகுதியால் (அவனைப் பிரிய முடியாமல்) உயிர் உள்ளே ஒடுங்கப்பெற்றான்; புன்கண் நிருதர் பெருந்தூதர் - (அதுகண்டு) துன்பஞ்செய்தலையே இயல்பாக உடைய அரக்கருடைய பெரிய தூதர்கள்;போனார், அரக்கனிடம் புகுந்தார் - போர்க்களத்தைவிட்டு நீங்கிச் சென்றவர்கள் அரக்கனாகிய இராவணன் (இருக்கும்) இடத்தை அடைந்தார்கள். |
மானுடவேடந்தாங்கி மண்ணுலகில் அவதரித்து வந்தமையின் மனிதருக்குரிய ஆசாபாசங்கள் அவனுக்கும் உள்ளதுபோல் காட்ட வேண்டி இராமபிரான் ஆவி உள்ளே அடங்கப்பெற்றான். இறைவனின் இவ்வெளிவந்த தன்மையை, |
‘துயரில் சுடரொளி தன்னுடைச் சோதி நின்றவண்ணம் நிற்கவே துயரில் மலியும் மனிசர் பிறவியில் தோன்றிக் கண்காண வந்து துயரங்கள் செய்துதன் தெய்வ நிலையுலகில் புகவுய்க்கு மம்மான் துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்ற யானோன் துன்பமிலலே!’ |
(திருவாய்மொழி - 3-10-6) |
என நம்மாழ்வார் பாடுவதைக் காணலாம். |
(229) |
8670. | ‘என் வந்தது, நீர்?’ என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப, ‘எறிசெருவில், நின் மைந்தன்தன் நெடுஞ் சரத்தால், துணைவர் எல்லாம் நிலம் சேர, |