பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 617

பின்வந்தவனும் முன் மடிந்த பிழையை நோக்கி,
                                 பெருந்துயரால்,
முன்வந்தவனும் முடிந்தான்; உன் பகை போய்
                        முடிந்தது’என மொழிந்தார்.

 

அரக்கர்க்கு இறைவன் ‘என்வந்தது நீர்?’என்று இயம்ப-அரக்கர்
வேந்தனாகிய  இராவணன்  (வந்த  தூதர்களை  நோக்கி) ‘நீர் வந்தது
என்ன காரணம் பற்றி?" என வினவ; நின் மைந்தன் நெடுஞ்சரத்தால்
-   (அது   கேட்ட   தூதர்)    ‘நின்னுடைய  மகன்  ஏவிய  நெடிய
பிரம்மாத்திரத்தால்;  துணைவரெல்லாம்  நிலம்  சேர - தன்னுடைய
தோழர்கள் எல்லோரும் நிலத்தில் மடிந்து வீழ; பின் வந்தவனும் முன்
மடிந்த  பிழையை  நோக்கி
- தன்பின்னே வந்த தம்பி இலக்குவனும்
தனக்கு  முன்னே  இறக்க  நேர்ந்தமைக்குக்  காரணமாயமைந்த  தனது
(காலத்தாழ்வாகிய)    பிழையை    எண்ணி;   பெருந்துயரால்  முன்
வந்தவனும்  முடிந்தான்
 - பெருந்துயரால் மூத்தோனாகிய இராமனும்
இறந்து  போனான்; ‘உன்பகைபோய் முடிந்தது’ என மொழிந்தார்-
(அதுவே)  ‘உனது  தீராப்  பகையும்   அறவே  தொலைந்தது’  எனக்
கூறினார்கள்.
 

இராமன்   நினைவிழந்து  கிடந்ததனை மரணமடைந்து விட்டதாகத்
தவறாக கருதிய தூதுவர் இராவணனுக்கு இங்ஙனம் அறிவிக்கின்றனர்.
 

                                                (230)