பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 619

அணிந்திருந்த     நிதியாக   பெரும்    செல்வத்தை   அவர்   (மிக
அதிகமாகப்  பெற்றமையால்) வெறுக்குமாறு  கொடுத்துவிட்டு; கய் ஆர்
வரைமேல்  முரசு  ஏற்றி, சாற்றி
- யானை மேல் முரசத்தை  ஏற்றச்
சொல்லி;  விளைந்தபடி  - போர்க்களத்தில்  கிடைத்த  வெற்றியினை;
"நகரம் களி சிறப்ப நெய் ஆர் ஆடல் கொள்க"-இலங்கை மாநகரம்
களிப்பு   மிகுமாறு  நெய்  தேய்த்து  முழுகுவதாகிய   நீராடல்  மேற்
கொள்வதாக;  என்று,  நிகழ்த்துக என்றான்- என்று சொல்லுக என்று
கட்டளையிட்டான்.
 

                                                   (1)
 

                       மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் தள்ளல்
 

8672.அந்த நெறியை அவர் செய்ய,
     அரக்கன் மருத்தன்தனைக் கூவி,
‘முந்த நீ போய், அரக்கர் உடல்
     முழுதும் கடலில் முடுக்கிடு; நின்
சிந்தை ஒழியப் பிறர் அறியின்,
     சிரமும் வரமும் சிந்துவென்’ என்று
உந்த, அவன் போய் அரக்கர் உடல்
     அடங்கக் கடலினுள் இட்டான்.

 

அந்த     நெறியை  அவர்  செய்ய  -  (இராவணன்  இட்ட)
அப்பணியினை  அப்பணியாளர் இயற்ற; அரக்கன் மருத்தன் தனைக்
கூவி
- இராவணன் மருத்தன் என்பவனை அழைத்து; முந்த நீ போய்
அரக்கர்  உடல் முழுதும் கடலில் முடுக்கிடு
- "முன்னே நீ சென்று,
இறந்து  கிடக்கும்  அரக்கரின்  உடம்புகள்  எல்லாவற்றையும் கடலில்
வீசுக";  நின்  சிந்தை ஒழியப் பிறர் அறியின் -(இச்செய்தியை) நின்
மனந்தவிரப்  பிறர் யாரேனும் அறிந்தால்; சிரமும்,வரமும் சிந்துவென்
என்று   உந்த
 -  (நின்)  தலையையும்  (நீ  தவத்தால்  பெற்றுள்ள)
வரத்தையும்  சிந்தி  விடுவேன்  என்று கூறி அனுப்ப;  அவன் போய்
அரக்கர்  உடல்  அடங்கக்  கடலினுள் இட்டான்
- அந்த மருத்தன்
சென்று அரக்கர் உடல் முழுவதையும் கடலில் போட்டான்.
 

இறந்து     பட்ட இராம இலக்குவரைச்  சீதைக்குக்  காட்டித் தன்
வெற்றிச்    சிறப்பை   அவள்   உணர   வேண்டுமென்ற   எண்ண
முடையனாதலின்   அங்ஙனம்   அவள்  போர்க்களம்  காணும்போது
அரக்கர்  எவரும்  இறவாமல் இராமன் பக்கத்தாரே இறந்தொழிந்தனர்
என அவள் நினைக்கும் வண்ணம் அரக்கருடல்களை மறைக்க