இராவணன் சீறி அகல்தல்
| 7721.
| ‘தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும் யாவரையும் கொன்று அருக்கி, என்றும் இறவாத மூவரையும், மேலை நாள் மூவா மருந்து உண்ட தேவரையும், வைப்பேன் சிறை’ என்னச் சீறினான்.
| தாவ அரிய பேர் உலகத்து - கடத்தற்கு அரிய மிகப் பரந்து பட்ட நிலவுலகில் உள்ள; யாவரையும் - எல்லாரையும்; கொன்று - கொன்று அழித்து; எம்பி சவத்தோடும் அருக்கி - என் தம்பியின் உயிரற்ற உடலோடு அடங்குமாறு செய்து; என்றும் இறவாத மூவரையும் - என்றைக்கும் இறந்து படாத (அரி அரன் அயன் என்ற) மூவரையும்; மேலை நாள் மூவா மருந்து உண்ட தேவரையும் - முற்காலத்தில் சாவா மருந்தாகிய அமிழ்தத்தை உண்ட தேவரையும்; சிறை வைப்பேன் - சிறையில் வைப்பேன்; என்னச் சீறினான் - என்று சீறினான்.
| தன் தம்பியைக் கொன்ற இராமபிரானைச் சினவாமல், மண்ணவரை அழிப்பேன், மூவரையும் தேவரையும் சிறை வைப்பேன் என்றமை காண்க. துயரத்தால் தோன்றிய சீற்றம் இது. இறவாதவர்களைச் சிறை வைத்து இறத்தற்கு உரியாரை அழிப்பேன் என்றபடி. தாவ அரிய - கடத்தற்கு அரிய, தா + அரிய எனப் பிரித்து அழிவு இல்லாத எனினுமாம். அருக்கி - அடங்குவித்து, மூவா - சாவா.
| (90)
| 7722. | அக் கணத்து, மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி, ‘இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால் முக் கைப் புனல் உகுப்பென், எம்பிக்கு’ என முனியா, திக்கு அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ விழியான்.
| திக்கு அனைத்தும் போர் கடந்தான் - எல்லாத் திசைகளிலும் சென்று போர் செய்து வெற்றி பெற்றவனாகிய இராவணன்; அக்கணத்து மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி - அந்த நேரத்தில் அமைச்சர்கள் ஆறுதல் கூறச் சிறிது (சினம்) தணிந்து; இக்கணத்து - இப்பொழுது; மானிடவர் ஈரக் குருதியால் - மனுசரான இராம |
|
|
|