இவ்வுபாயத்தை மேற்கொள்ளுகின்றான். ஆர்வமிகுதியால் அறிவாளியும் அறிவற்ற செயல்களைச் செய்வான் என்பதற்கு இதுவோர் எடுத்துக்காட்டு. |
இப்பாடலின் செய்தி நாடகத் திறம் செறிந்ததாகும். மருத்து மலையின் நற்பயன் அரக்கர் சேனைக்கு வாய்க்காமல் போனது இராவணன் செயலால் ... இதுபோன்ற பல நயங்களைக் கொண்டது இப்பாடலின் செய்தி, |
(2) |
சீதையைக் களத்திற்குக் கொணர்தல் |
8673. | ‘தெய்வ மானத்திடை ஏற்றி மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம் தய்யல் காணக் காட்டுமின்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து அய்யம் நீங்காள்’ என்று உரைக்க, அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி, உய்யும் உணர்வு நீத்தாளை நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார். |
தெய்வ மானத்திடை ஏற்றி - (பின்பு இராவணன் சீதைக்குக் காவலாய் அமைந்த அரக்கியரை அழைத்து, நீங்கள்) சீதையைத் தெய்வத்தன்மையை உடைய புட்பக விமானத்தில் ஏற்றி; மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம் -இராமலக்குமவராகிய மனிதர்க்கு நேர்ந்த கதி எல்லாவற்றையும்; தய்யல் காணக் காட்டுமின்கள்-அவள் காணுமாறு காட்டுங்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து,அய்யம் நீங்காள்- தன் கண்ணால் கண்டால் அல்லது தன் மனத்தின் கண்ணுள்ள ஐயப்பாடு நீங்கப்பெறாள்; என்று உரைக்க - என்று (அவ்விராவணன்) கூற; அரக்க மகளிர் இரைத்து ஈண்டி -அரக்கியர்கள் ஆரவாரித்துக் கொண்டு நெருங்கி; உய்யும் உணர்வு நீத்தாளை - இவ்வுலகில் உய்ந்திருக்க வேண்டும் என்னும் உணர்ச்சியற்ற சீதையை; நெடும் போர்க் களத்தின் மிசை உய்த்தார் - நெடிய போர்க்களத்துக்கு மேலாக அழைத்துச் சென்றார்கள், |
(3) |
இராவணன் கண்ட சீதையின் துயர் |
8674. | கண்டாள் கண்ணால் கணவன் உரு; அன்றி, ஒன்றும் காணாதாள்; |