பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 621

உண்டாள் விடத்தை என, உடலும்
     உணர்வும் உயிர்ப்பும் உடன் ஓய்ந்தாள்;
தண் தாமரைப் பூ நெருப்புற்ற
     தன்மை உற்றாள்; தரியாதாள்;
பெண்தான் உற்ற பெரும் பீழை
     உலகுக்கு எல்லாம் பெரிது அன்றோ!

 

கணவன்  உரு கண்ணால் கண்டாள் - கணவன் உருவைச் சீதை
கண்ணால் கண்டாள்; அன்றி ஒன்றும் காணாதாள் - அவ்வுருவத்தை
அன்றி  வேறு ஒன்றும் காணாதவள் ஆயினாள்; உண்டாள் விடத்தை
என
 -  (பின்பு)  விடத்தை  உண்டவள் போல; உடலும், உணர்வும்,
உயிர்ப்பும்  உடன் ஓய்ந்தாள்
- உடம்பும், உணர்ச்சியும்,  உயிர்ப்பும்
ஒருங்கே  ஓயப்பெற்றாள்; தண்டாமரைப்  பூ  நெருப்புற்ற  தன்மை
உற்றாள்
    -        குளிர்ந்த       தாமரைப்பூ      நெருப்பில்
வீழ்ந்தாற்போன்றதன்மையை  அடைந்தாள்;  தரியாதாள்  பெண்தான்
உற்ற  பெரும் பீழை
- (பெருந்துயரைத்) தாங்கமாட்டாதவளான சீதை
என்னும்   பெண்   அடைந்த   பெருந்துயரம்;  உலகுக்கு  எல்லாம்
பெரிதன்றோ?
- உலகங்கள் எல்லாவற்றினும் பெரியதாகும் அன்றோ?
 

                                                  (4)
 

8675.மங்கை அழலும்-வான் நாட்டு
     மயில்கள் அழுதார்; மழ விடையோன்
பங்கின் உறையும் குயில் அழுதாள்;
     பதுமத்து இருந்த மாது அழுதாள்;
கங்கை அழுதாள்; நாமடந்தை
     அழுதாள்; கமலத் தடங் கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத
     அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்.
 

மங்கை  அழலும் - (உயிரோய்ந்திருந்த) சீதை எழுந்து அழுதலும்;
வான்    நாட்டு    மயில்கள்  அழுதார்   -   (அவளைக்கண்டு)
வானுலகத்திலுள்ள   மயில்  போன்ற  சாயலை  உடைய  தேவமாதர்
அழுதனர்;மழவிடையோன் பங்கின் உறையும் குயில் அழுதாள் -
இளமையான எருதை ஊர்தியாகவுடைய சிவபிரானது இடப்பாகமமர்ந்த
குயில் போன்றவளான உமையவள் அழுதாள்; பதுமத்து இருந்த மாது
அழுதாள்
 -  செந்தாமரை  மலரில் தங்கியுள்ள திருமகள் அழுதாள்;
கங்கை அழுதாள் நாமடந்தை அழுதாள் -