பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 623

உயிர்ப்பும்   நீத்திட்டாள் -  (அப்போது   பிராட்டி)  நினைப்பும்,
உயிர்ப்பும் நீத்தவளானாள்.
 

பாவமும்  அழுதது  என்ற  செய்தியை  முன்  பாடலில் அரக்கியரும்
அழுத செய்தியோடு இணைத்துக்காண்க.
 

                                                 (6)
 

                             சீதை தெளிந்து துன்புற்று ஏங்குதல்
 

8677.நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை
     நீரால் தெளித்து, நெடும் பொழுதின்
இனத்தின் அரக்கர் மடவார்கள்
     எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்;
கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும்
     கண்டாள்; கயலைக் கமலத்தால்
சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச்
     சிதையக் கையால் மேதினாள்.

 

நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை-நினைப்பும், உயிர்ப்பும் இன்றி
மூர்ச்சையுற்றிருந்த  சீதையை;  இனத்தின் அரக்கர்  மடவார்கள் -
கூட்டமான  அரக்கப் பெண்கள்; நெடும்பொழுதின் நீரால் தெளிந்து
எடுத்தார்
 -  நெடிது  நேரம்  வரை  நீர் தெளித்து தெளியச் செய்து,
எடுத்து  அமரச்  செய்தார்கள்;  உயிர்  வந்து  ஏங்கினாள் - சீதை
அவர்தம்  உதவியால்  உயிர்  வரப்பெற்று  வருந்தினாள்;  கனத்தின்
நிறத்தான்  தனைப்  பெயர்த்தும்  கண்டாள்
 - மேக வண்ணனான
இராமனை  மீண்டும்  முன்கிடந்தவாறே  கிடக்கக்கண்டாள்;  கயலைக்
கமலத்தால்  சினத்தின் அலைப்பாள் என
- கயல் மீனைத் தாமரை
மலரால்  கோபங்கொண்டு  அடிப்பவள்  போல; கண்ணைக் கையால்
சிதைய  மோதினாள்
- கண்களைக் கைகளால் சிதையுமாறு அடித்துக்
கொண்டாள்.
 

கனம் -மேகம்
 

                                                  (7)
 

8678.அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்;
     அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்;
     கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச்
     சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்;