| குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள்,-குயில் அன்னாள். | குயில் அன்னாள் - குயில் போன்ற இனிய குரலுடைய சீதை; அடித்தாள் முலைமேல் வயிறு அலைத்தாள் - மார்பின்மேல் அடித்துக்கொண்டாள், வயிற்றின்மேல் அறைந்தாள்; அழுதாள்; தொழுதாள் - அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல் வீழ்ந்த கொடித்தான் என்ன மெய் சுருண்டாள் - நெருப்பில் விழுந்த கொடிபோல உடம்பு சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள் - மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்; துடித்தாள், மின்போல் உயிர்கரப்பச் சோர்ந்தாள் - துடித்தாள், மின்னல் தோன்றி மறைவதுபோல முன்வந்த உயிர்ப்பு மீண்டும் மறையச் சோர்வுற்றாள்; சுழன்றாள்; துள்ளினாள் - மனம் சுழலப் பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை,உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள் - கணவனை இழந்த துயரைத் தன் உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள். | சிறு சிறு சொற்களையும் தொடர்களையும் பலவாக அடுக்கி மெய்ப்பாடு புலப்படுத்துவது கவிச் சக்கரவர்த்தியின் இலக்கிய நெறி. | (8) | 8679. | விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்; எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்; ‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம் கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும் தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்; சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்; | விழுந்தாள்,புரண்டாள், உடல்முழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்; புரண்டாள், உடல்முழுதும் வியர்க்கப் பெற்றாள்; அயர்த்தாள், வெதும்பினாள் - பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்; எழுந்தாள், இருந்தாள் - பின்பு எழுந்தாள், உடனே அமர்ந்தாள்; குளிர்க்கரத்தை நெரித்தாள்,சிரித்தாள், ஏங்கினாள்-தனது கரங்களை நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை எண்ணிச்) சிரித்தாள், உடனே ஏங்கினாள்; ‘கொழுந்தா’ என்றாள் - (இலக்குவனைப் பார்த்துக் ‘கொழுந்தா!’ என்று கூவினாள்; ‘அயோத்தியர்தங்கோவே!’ என்றாள் - இராமனைப் |
|
|
|