பக்கம் எண் :

624யுத்த காண்டம் 

குடித்தாள் துயரை, உயிரோடும்
     குழைத்தாள்; உழைத்தாள்,-குயில் அன்னாள்.

 

குயில்    அன்னாள் - குயில் போன்ற இனிய குரலுடைய சீதை;
அடித்தாள்   முலைமேல் வயிறு  அலைத்தாள் -  மார்பின்மேல்
அடித்துக்கொண்டாள்,   வயிற்றின்மேல்   அறைந்தாள்;   அழுதாள்;
தொழுதாள்
- அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல்  வீழ்ந்த
கொடித்தான்   என்ன  மெய் சுருண்டாள்
 - நெருப்பில்  விழுந்த
கொடிபோல    உடம்பு  சுருண்டாள்;  கொதித்தாள்;  பதைத்தாள்;
குலைவுற்றாள்
 - மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்;
துடித்தாள்,  மின்போல் உயிர்கரப்பச்  சோர்ந்தாள் - துடித்தாள்,
மின்னல்   தோன்றி  மறைவதுபோல  முன்வந்த  உயிர்ப்பு  மீண்டும்
மறையச்  சோர்வுற்றாள்;  சுழன்றாள்;  துள்ளினாள் - மனம் சுழலப்
பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை,உயிரோடும்
குழைத்தாள்;   உழைத்தாள்
 -  கணவனை  இழந்த துயரைத் தன்
உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள்.
 

சிறு  சிறு  சொற்களையும்   தொடர்களையும்  பலவாக   அடுக்கி
மெய்ப்பாடு புலப்படுத்துவது கவிச் சக்கரவர்த்தியின் இலக்கிய நெறி.
 

                                                  (8)
 

8679.விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்
     வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்;
எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை
     நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்;
‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்
     கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும்
தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;
     சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;

 

விழுந்தாள்,புரண்டாள், உடல்முழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்;
புரண்டாள்,   உடல்முழுதும்   வியர்க்கப்   பெற்றாள்;   அயர்த்தாள்,
வெதும்பினாள்
 -  பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்;
எழுந்தாள்,  இருந்தாள்  -  பின்பு  எழுந்தாள், உடனே அமர்ந்தாள்;
குளிர்க்கரத்தை நெரித்தாள்,சிரித்தாள், ஏங்கினாள்-தனது கரங்களை
நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை  எண்ணிச்)  சிரித்தாள், உடனே
ஏங்கினாள்;   ‘கொழுந்தா’   என்றாள் -  (இலக்குவனைப்  பார்த்துக்
‘கொழுந்தா!’  என்று கூவினாள்; ‘அயோத்தியர்தங்கோவே!’ என்றாள்
- இராமனைப்