| மதியேன் மதியேன் உனை-வாய்மை இலா விதியே!-கொடியாய், விளையாடுதியோ? |
வாய்மை இலா விதியே! - வாய்மை தவறிய விதியே!; முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால் - அறிவினால் பெரியவர்கள் எல்லாம் உணர்தற்குரிய வேதங்கள் சொல்லிய நெறியில் அல்லது; கதி ஏதும் இலார் துயர் காணுதியோ? - வேறுபற்றுகோடு ஏதுமில்லாதவர்களுடைய (இராமலக்குவர்) துன்ப நிலையைக் கண்டு கொண்டுதான் இருக்கின்றாயோ?; கொடியாய் விளையாடுதியோ? - அல்லது (என்னைச் சோதிக்கக்) கொடுமையுடையாய் விளையாடுகின்றாயோ?; உனைமதியேன்! மதியேன்! - (எங்ஙனமாயினும்) உனை (ஒருபொருட்டாக) மதிக்கமாட்டேன்! மதிக்கமாட்டேன்! |
(11) |
8682, | ‘கொடியேன் இவை காண்கிலேன்; உயிர் கோள் முடியாய், நமனே! முறையோ! முறையோ! விடியா இருள்வாய் என வீசினையே?- அடியேன் உயிரே! அருள் நாயகனே! |
கொடியேன் இவை காண்கிலேன் - கொடியவளாகியயான் (இராமலக்குவர்க்கு நேர்ந்துள்ள) இந்த அவல நிலைமையைக் காணப்பெறேன்; நமனே - கூற்றுவனே! அடியேன் உயிரே, அருள் நாயகனே! - அடியேனுடைய உயிரே அருள் மிக்க என் நாயகனே! உயிர்கோள் முடியாய் - (அப்படிப்பட்ட என் நாயகனும் தம்பியும் வீழ்ந்து கிடக்கக் கண்டு கதறும் என்) உயிரைக் கொள்ளும் செயலை முடிக்காமல்; விடியா இருள்வாய் எனை வீசினையே - விடிவில்லாத இருளில் (முடிவில்லாத துன்பத்தில்) என்னை வீசிவிட்டாயே! முறையோ முறையோ - இது முறையாகுமா? முறையாகுமா? (முறையன்று). |
(12) |
8683, | ‘எண்ணா, மயலோடும் இருந்தது நின் புண் ஆகிய மேனி பொருந்திடவோ?- மண்ணோர் உயிரே! இமையோர் வலியே! கண்ணே! அமிழ்தே! கருணாகரனே! |
மண்ணோர் உயிரே! - மண்ணுலகத்தவர்க்கு உயிர் போன்றவனே; இமையோர் வலியே! - தேவர்கட்கு |