பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 627

(பகைவெல்வதில்)    வலிமையாக இருப்பவனே!  கண்ணே, அமிழ்தே,
கருணாகரனே
 -  என்  கண் போன்றவனே என் உயிர்க்கு  அமி்ழ்தம்
போன்றவனே, கருணையின் நிலையமே; எண்ணாமயலோடும் இருந்தது
-  எனக்குற்ற துன்பங்களைச் சிறிதும் எண்ணாமல்,  யான்  இது  காறும்
அளவிட  முடியாத  காதல்   மயக்கத்தோடு  அரக்கர்   ஊரில்  உயிர்
வாழ்ந்திருந்தது; நின்புண்ணாகிய  மேனி  பொருந்திடவோ? -  நின்
புண்ணான உடம்பைப் பொருந்திடத்தானோ?
 

சீதை     ஊணுறக்கமின்றிப்  பகைவர்   ஊரில்   வாழ்ந்திருந்தது
பகைவரை   வென்று   புகழோடுவரும்   இராமன்  அழகைக்  காண
வேண்டும்   என்னும்   ஆசையால்   தான்   என்பதனை,  முன்னும்
கூறியுள்ளதால் (கம்ப. 7653) அறிக.
 

                                                  (13)
 

8684.‘மேவிக் கனல் முன், மிதிலைத்தலை, என்
பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின்
ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ்
தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே!
 

அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே - செந்தாமரை மலரில் வாழ்கின்ற
திருமகளுக்கு   அமிழ்தம்  போன்றவனே!  மறையின்  தெளிவே!  -
வேதத்தின்  தெளிபொருளாக   உள்ளவனே!  பண்ணவ  -  கடவுளே!
மிதிலை  மேவிக்  கனல்  முன்  என்  பாவிக் கைபிடித்தது - (நீ)
மிதிலைக்கு  வந்து  ஓமத்தீமுன்னர்   பாவியாகிய  என்  கை  பிடித்து
மணந்து  கொண்டது;  நின்  ஆவிக்கு ஒரு கோள் வரவோ? - நின்
உயிருக்கு ஒரு தீமை நிகழ்தற்குத்தானோ?
 

                                                  (14)
 

8685,‘உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு;
அய்யா! இளையோர் அவர் வாழ்கிலரால்;
மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங்
கய்கேசி கருத்து இதுவோ?-களிறே!

 

களிறே!  ஐயா!  -  ஆண்யானைபோன்றவனே,  தலைவனே உயர்
கோசலைதன்  உயிரோடு உய்யாள்
- (நின் நிலைமையைக் கேட்டால்)
உயர்ந்த  பண்பினளான கோசலை  தன்  உயிர் உய்ந்திருக்க மாட்டாள்;
இளையோர் அவர் வாழ்கிலர் - (நினக்கு) இளையவர்களாகிய அப்பரத
சத்துருக்கர்  (நின்னை இழந்து)  உயிர்  வாழ்ந்திருக்க மாட்டார்; வினை
எண்ணி விடுத்த
- வஞ்சனை