பக்கம் எண் :

628யுத்த காண்டம் 

நினைந்து  நின்னைக் காட்டிற்கு  அனுப்பிய; கொடுங்கய்கேசி கருத்து
மெய்யே  இதுவோ?
 -  கொடிய தன்மையளான கைகேசியின் கருத்து
உண்மைாகவே இது தானோ?
 

‘கைகேசி’ என்பது எதுகை நோக்கி ‘கய்கேசி’ என நின்றது.
 

                                                 (15)
 

8686."தகை வான் நகர் நீ தவிர்வாய்" எனவும்,
வகையாது, தொடர்ந்து, ஒரு மான் முதலா,
புகை ஆடிய காடு புகுந்து, உடனே
பகை ஆடியவா! பரிவு ஏதும் இலேன்!

 

"தகைவான் நகர் நீ தவிர்வாய்" எனவும்-பெருமைசான்ற உயர்ந்த
அயோத்தி  நகரில்  நீ  தங்கி  இருப்பாயாக" என்று நீ கூறவும்; பரிவு
ஏதும்   இலேன்
 -  இரக்கம்  சிறிதும்  இல்லாத  நான்; வகையாது
தொடர்ந்து
- நின்னைப் பிரிந்திராமல் தொடர்ந்து; புகை ஆடிய காடு
புகுந்து
 - புகை மண்டியகானகத்தில் நின்னுடனே  புகுந்து; ஒரு மான்
முதலா பகை ஆடியவா!
- ஒரு மான் காரணமாக நின்னைக் கொல்லும்
பகையை உண்டாக்கியவாறு என்னே!
 

சீதை தற்பழி நொந்து புலம்பும் இடம் இது.
 

                                                  (16)
 

8687."இன்று ஈகிலையேல், இறவு இவ் இடை; மான்
அன்று, ஈ" எனவும் பிரிவோடு அடியேன்
நின்று ஈவது, நின்னை நெடுஞ் செருவில்,
கொன்று ஈவது ஓர் தீமை குறித்தலினோ?

 

அன்று   -  அக்காலத்தில்; இன்றுமான்  ஈகிலையேல் - இன்று
மானைப்  பிடித்துக் கொடுக்கவில்லையானால்;  இவ்விடை  இறவு  ஈ
எனவும்
   -   இவ்விடத்து   எனக்கு   இறப்புத்தான்;   (ஆதலால்)
அம்மானைப்  பிடித்துக்கொடு என வேண்டவும்; பிரிவோடு அடியேன்
நின்று  ஈவது
 -  நிற்பிரிந்து  அடியேன்  தனித்து நின்றது; நின்னை
நெடுஞ் செருவில் கொன்று  ஈவது  ஓர் தீமை குறித்தலினோ?
 -
நின்னை   நெடிய  போரில்  கொல்வதோர்  தீமை   நினைத்தலினால்
தானோ?
 

                                                  (17)
 

8688.‘நெய் ஆர் பெரு வேள்வி நிரப்பி, நெடுஞ்
செய் ஆர் புனல் நாடு திருத்துதியால்;