| மெய் ஆகிய வாசகமும் விதியும் பொய் யான, என மேனி பொருந்துதலால். |
நெய்யார் பெருவேள்வி நிரப்பி - (முடிசூட்டு விழாவில் செய்தற்குரிய நெய் நிரம்பச் சொரியப் பெறும் பெரிய வேள்வியை நிறைவுறச் செய்து; நெடுஞ் செய் ஆர் புனல் நாடு திதுத்துதியால் - பின், வயல்கள் நிறைந்த நீர் வளம் மிக்க கோசல நாட்டை நீதி வழுவாமல் அரசாண்டிருப்பாய்; என்மேனி பொருந்துதலால் - (பாவியாகிய) என் உடம்பைத் தீண்டிய குற்றத்தால்; மெய் ஆகிய வாசகமும் விதியும் பொய் ஆன - (நின்தந்தை நினக்கு முடி சூட்டுவதாகக்கூறிய) மெய்யான சொல்லும், நீ முடி சூடுதற்குரியதாக அமைந்த விதியும் பொய்யாயின! |
(18) |
8689, | ‘மேதா! இளையோய்! விதியார் விளைவால், போதா நெறி எம்மொடு போதுறுநாள், "மூது ஆனவன் முன்னம் முடிந்திடு" எனும், மாதா உரையின்வழி நின்றனையோ? |
மேதா! இளையோய்! - அறிவு நிரம்பியவனே! இளவரசே! விதியார் விளைவால் - விதியின் விளைவாக; போதா நெறிஎம்மொடு போதுறுநாள் - சொல்ல முடியாத காட்டு வழியில் எங்களோடு வரப்புறப்படும் நாள்;"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு" எனும் - "முன்னவனாகிய இராமன் இறக்கும் நிலை நேர்ந்தால், அவனுக்கு முன் நீ முடிந்திடுவாயாக" எனக் கூறிய; மாதா உரையின் வழி நின்றனையோ - நின்தாய் சுமித்திரையின் சொல்வழியே (நீ) முன்னம் இறந்தனையோ?" |
மேதா - அறிவாளன்; போதா நெறி - மக்கள் நடமாட்டமற்ற காட்டு வழி. மூதானவன் - அண்ணன். |
கம்ப.1752 நினைவில் கொண்டு "மாதா உரையின் வழி நின்றனையோ என வினவுகின்றாள் சீதை. |
(19) |
8690. | ‘பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல் கோவும் துயில, தவிர்வாய்! கொடியார் ஏவின்தலை வந்த இருங் கணையால் மேவும் குளிர் மெல் அணை மேவினையோ? |