பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல் - மெல்லிய பூவும், தண்ணியதளிரும் நிறைந்துள்ள சிறந்த படுக்கையில்; கோவும் துயில, தவிர்வாய் - இராமன் துயில் கொள்ளும்போது (அவனைக் காத்துக்கொண்டு, தூக்கத்தை விடுத்து) விழித்திருப்பவனே! கொடியார் ஏவின் தலைவந்த இருங்கணையால் - (இப்போது) கொடியவர்களாகிய அரக்கர்தம் வில்லினிடத்திருந்து வெளிப்பட்டு வந்த பெரிய அம்புகளால்; மேவும் குளிர்மெல் அணைமேவினையோ - அமைந்த குளிர்ந்த மெல்லிய படுக்கையை விரும்பிப் படுத்து உறங்குகின்றாயோ? | (20) | திரிசடை சீதையின் மயக்கம் தீர்த்தல் | 8691. | ‘மழு வாள் வரினும் பிளவா மனன் உண்டு அழுவேன்; இனி, இன்று இடர் ஆறிட, யான் விழுவேன், அவன் மேனியின்மீதில்’ எனா, எழுவாளை விலக்கி இயம்பினளால்: | மழுவாள் வரினும் - மழு, வாள் என்கின்ற ஆயுதங்கள் வந்து தாக்கினாலும்; பிளவாமனன் உண்டு அழுவேன் - பிளந்துபடாத கடினமான மனம் (எனக்கு) உண்டு; எனவே என் கணவன் உயிர்நீத்தமை கண்ட அளவிலேயே உயிர் விடாமல் வெற்று அழுகையாக அழுவேன்; இனி, இடர் இன்று ஆறிட - இனி (அவ்வெற்றெழுகையை விடுத்து இப்பெருந்துன்பத்தினின்றும் இப்பொழுது ஆறுதல் பெற்றிட; யான் அவன் மேனியின் மீதில் விழுவேன் - அப்பெருமானின் மேனியின் மேல் விழுந்து உயிர் விடுவேன்; எனா எழுவாளை - என்று சொல்லி எழுபவளை; விலக்கி இயம்பினளால் - தடுத்து (திரிசடை) கூறலானாள். | (21) | அறுசீர் ஆசிரிய விருத்தம் | 8692. | ‘மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப் பாடு உற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு, கூடினள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள்- தேடிய தவமே என்னத் திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள். |
|
|
|