பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 631

தேடியதவமே அன்ன திரிசடை - சீதை முன்பு தேடிய தவப்பயன்
போன்ற   திரிசடை;   மறுக்கம்     தீர்ப்பாள்   -  (அப்பிராட்டியின்)
மனக்கலக்கத்தை  அகற்றுபவளாகி;  மாடு உற வளைந்து நின்ற வளை
எயிற்று  அரக்கி  மாரை
 - அவள் பக்கத்தில் சுற்றி நின்ற வளைந்த
கோரப்  பற்களை  உடைய  அரக்கியர்களை;  பாடுஉற  நீக்கி, நின்ற
பாவையைத்  தழுவிக்  கொண்டு
-  இருபக்கமும் பிரிந்து போகுமாறு
நீக்கிக்கொண்டு,  (இராமன்மேல்   விழும் நோக்கத்தோடு) நின்ற பாவை
போன்ற   சீதையைத்   தழுவிக்கொண்டு;  கூடினள்  என்ன  நின்று
செவியிடை  குறுகிச்  சொன்னாள்
    -  அவளோடு  ஒன்றாயினாள்
என்னுமாறு நெருங்கி நின்று அவள் செவியிற் சென்று சொன்னாள்.
 

                                                (22)
 

8693,

‘மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும்,
போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும்,
நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால்
ஆய மா மாயம்; ஒன்றும் அறிந்திலை, அன்னம் அன்னாய்!

 

அன்னம் அன்னாய், அமா!- அன்னம் போன்ற தாயே!; மாயமான்
விடுத்தவாறும்
 - மாரீசனாகிய மாயமானை முன் விடுத்த   தன்மையும்;
சனகனைவகுத்தவாறும்  - மாயா சனகனை உண்டாக்கின   தன்மையும்;
போயநாள் நாகபாசம்  பிணித்தது  போனவாறும் -  சென்ற நாளில்
(இராமலக்குவன்     முதலானோரை)    பிணித்ததாகிய      நாகபாசம்
அழிந்துபோன  தன்மையும்;  நினையாய்  -  எண்ணிப்   பார்ப்பாயாக;
நெறி  இலாரால்  ஆய மா  மாயம் ஒன்றும் அறிந்திலை -  நல்ல
நெறியில்  செல்லாதவர்களால்  (அரக்கரால்)   உண்டாய பெரிய  மாயச்
செயல் ஒன்றையும் அறிகிலையாய்; மாளநினைதியோ? -  மாண்டுபோக
நினைக்கின்றாயோ?
 

                                                (23)
 

8694.

‘கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும்,
தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும்