பக்கம் எண் :

632யுத்த காண்டம் 

அண்டர் நாயகர் தம் வீரத் தன்மையும், அயர்க்கலாமோ?
புண்டரீகற்கும் உண்டோ, இறுதி, இப் புலையர்க்கு
                                      அல்லால்?

கண்ட அக் கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் - நீ முன்
கண்டுள்ள   கனவும்  பெற்றுள்ள  நன்னிமித்தங்களும்,    நின்னுடைய
கற்பின்  திண்மையும்;  தண்டவாள் அரக்கர்  பாவச்  செய்கையும் -
தண்டாயுதத்தையும்,    வாளையுமுடைய    அரக்கர்   தம்    பாவச்
செய்கையும்; தருமம் தாங்கும் அண்டர் நாயகர் தம வீரத்தன்மையும்
-  தருமத்தைத்  தாங்குகின்ற  இராமலக்குவரின்  வீரத்    தன்மையும்;
அயர்க்கலாமோ?     -     மறக்கலாகுமோ?    (மறக்கலாகாதுகாண்);
இப்புலையர்க்கு  அல்லால் புண்டரீகற்கும்  உண்டோ  இறுதி?  -
இப்புலையர்களாகிய  அரக்கர்க்கு  அழிவு  உண்டாவதல்லால்   உந்திக்
கமலத்தை    உடைய    திருமாலின்    அமிசமான     இராமனுக்கும்
அழிவுண்டாகுமோ?

                                                (24)

8695.

ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை,
ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும்
ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல்
வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-மண்ணில் வந்தாய்!

மண்ணில் வந்தாய் - பூமியினின்றும் தோன்றியவளே!  ஆழியான்
ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும்  உறுகிலாமை
-  சக்கரப்படைக்கு
உரியவனாகிய  இராமனது  உடம்பில் அம்பு ஒன்றும்  அழுந்தவில்லை
என்பதை; ஏழைநீ காண்டி அன்றே - மென்மையான உள்ளமுடைய நீ
நேரே     காண்கிறாயல்லவோ?     இளையவன்      வதனம்   -
(அம்புபட்டிருந்தாலும்)  இலக்குவனின்  முகம்;  இன்னும்   ஊழி நாள்
இரவி  என்ன ஒளிர்கின்றது
- இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும்
சூரியனைப்  போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; உயிருக்கு  இன்னல்
வாழியார்க்கு  இல்லை
 -  எனவே  நெடிதுநாள் வாழுந்தன்மையுள்ள
அவ்விருவர்க்கும்