மங்கை நின் வரத்தினாலே - மங்கையே! நீ கொடுத்த வரத்தினாலே; மாருதிக்கு ஆருயிர் நீங்கல் இல்லை அன்றே - அனுமானுக்கு அரிய உயிர் நீங்கப் பெறுதல் இல்லை அன்றோ? நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமோ - (அனுமான் உயிர் நீங்கி இருப்பின் நின் கற்பின் பெருமை குன்றும்) நின்பால் அமைந்த கற்பிற்கும் அழிவு உளதாமோ? இது ஒன்றும் சீரியது அன்று - இரவெல்லாம் மூர்ச்சையுற்றுக் கிடக்கின்ற இந்நிலை ஒன்றும் பிறிதொன்றால் நீங்காத சிறப்பினதன்று; திசைமுகன் படையின் செய்கை இப்பொழுதே பேரும் - இது பிரம்மாத்திரத்தின் செய்கையாகும்; இது இப்போதே நீங்கும்; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ? - தேவர்களின் எண்ணமும் தவறு படுவது உண்டோ? (இல்லை).
(27)
8698.
‘தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில் சேர்த்தி, மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி, ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை! "கூவலில் புக்கு, வேலை கோட்படும்" என்று கொள்ளேல்.
தேவரைக்கண்டேன் - விண்ணவர்களைப் பார்த்தேன்; மூவரைக்கண்டால் என்ன இருவரை முறையின் நோக்கி-(அவர்கள்) திருமூர்த்திகளைக் காண்பார் போன்று (உயிர்சோர்ந்து கிடக்கின்ற) இருவரையும் முறையாகப் பார்த்து; பைம்பொன் செங்கரம் சிரத்தில் சேர்த்தி - பசும் பொன்னாற் செய்த அணிகலன் அணிந்த தம் சிவந்த கைகளைத்தலைமேல் வைத்து; ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர் - வணங்கிச் செருக்குற்றிருக்கின்றனர் துன்புறவில்லை; அன்னை! அஞ்சல் - ஆதலால் அன்னையே, அஞ்சாதே! ‘வேலை கூவலில்புக்கு கோட்படும்’ என்று கொள்ளல் - கடல் கிணற்றில் புகுந்து அக்கிணற்றால் கொள்ளப்பட்டு விடும் என்று கொள்ளாதே!
(28)
8699.
‘மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை, நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று அன்றால்;