பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 635

இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி’
                                   என்றாள்;
சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள்.

 

நங்கையே! இக்கடவுள் மானம் -  பெண்களிற்சிறந்தவளே!  இந்தத்
தெய்வத்தன்மை   வாய்ந்த  புட்பகவிமானம்;  மங்கலம்  நீங்கினாரை
ஆருயிர்   வாங்கினாரை
  -   மங்கலநாண்   நீங்கப்பெற்ற   கைம்
பெண்டிரையும்,   அரிய   உயிர்    நீங்கப்பெற்று   பிணமானவரையும்;
தாங்குறும் நவையிற்று  அன்றால் - தாங்குகின்ற குற்ற முடையதன்று;
‘இங்கு இவை அளவையாக இடர்க்கடல் கடத்தி’ என்றாள் - இங்கு
யான்  கூறிய  இக்கருத்துக்களை  அளவையாகக்   கொண்டு  இராமன்
இறக்கவில்லை   என்பதறிந்து    துன்பக்கடலைக்   கடப்பாயாக  எனத்
திரிசடை    கூறினாள்;  சங்கையள்  ஆயதையல்   சிறிது   உயிர்
தரிப்பதானாள்
  -  (இராம  லக்குவர்  இறந்து  விட்டார்களோ  என)
ஐயம்கொண்டவளான சீதை   (திரிசடை சொற்களால்) சிறிது உயிர்தாங்கி
இருப்பாளானாள்.
 

கடவுள்   மானம் - தெய்விகமான புட்பக விமானம். சங்கை - ஐயம்.
பல  ஏதுக்களைக்  காட்டிச்   சீதையின்  ஐயத்தைப்   போக்க முயலும்.
காட்சியும்  அனுமானமும்,  அருத்தாபத்தியும், ஆகிய   அளவைகளைக்
கூறிய   திரிசடை   இராமன்   முதலியோர்   இறந்திலர்    என்பதை
நிறுவினளாதலின், ‘இங்கிவை   அளவையாக இடர்க்கடல் கடத்தி’ எனக்
கூறினாள்.
 

                                                (29)
 

                                         சீதையின் மறுமொழி
 

8700.

‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே
உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம்
                                      உய்ந்தேன்;
இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல்
                                       என்பால்
முன்னமே முடிந்தது அன்றே ?’ என்றனள்-முளரி நீத்தாள்.

 

முளரி நீத்தாள்  -  தாமரை  மலரை  விட்டுச்  சனகன்  மகளாகப்
பிறந்தவளாகிய திருமகளாகிய சீதை; அன்னை! நீ உரைத்தது