பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 639

தையல்போயினள்     -  சீதை   அசோகவனத்திற்குப்   போய்ச்
சேர்ந்தாள்;   இப்பால்,  ‘புரிக’   என  -   இங்கே,   இராமபிரான்
‘செய்க’  என; புலவர் காமான்  ஏயின  கருமம் நோக்கி எய்திய -
தேவர்தலைவனாகிய  இராமபிரான் தன்னை நோக்கி ஏவிய   பணியைச்
செய்யக்கருதிச்  சென்ற;  இலங்கை  வேந்தன்  -  வீடணன்; மேயின
உணவு  கொண்டு  மீண்டு
 -  பொருந்திய  உணவுப் பொருள்களைக்
கொண்டு   திரும்பி;  அவை  உறையுள்விட்ட ஆயின   ஆக்கி  -
அவற்றைப்  பாசறையுள்  சேர்த்துவிட்டு;  தான் வந்து, அமர்ப்பெருங்
களத்தன்   ஆனான்
  -  தான்  பெரும்  போர்க்களத்திற்கு   வந்து
சேர்ந்தான்.

                                                  (1)

8704.

நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க
                                        நோற்றான்
வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும்
தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே
தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு
                                       தீர்ந்தான்.

பண்டு இவ்வுலகினைப் படைக்கநோற்றான்-(போர்க்களம்  போந்த
வீடணன்)     ஆதியில்    இவ்வுலகங்களையெல்லாம்      படைக்கும்
பேறுபெற்றவனாகிய   பிரமதேவனுடைய;  வாக்கினால்    மாண்டார்
என்ன
  -   சாபச்சொல்லால்   இறந்து  பட்டனர்    என்னும்படியாக;
வானரவீரர்   முற்றும்   தாக்கினார்  -  வானரவீரர்  அனைவரும்
(பிரம்மாத்திரத்தால்)  தாக்கப்பெற்றவராய்; எல்லாம் பட்ட தன்மையை
நோக்கினான்  கண்டான்
- எல்லோரும் இறந்துபட்ட தன்மையைத்தன்
கண்களால்   கண்டான்; விடத்தைத்தானே தேக்கினான்   என்ன  -
(கண்டு)   நஞ்சினைத்   தானே  அருந்தினான்  என்னுமாறு;   நின்று,
தியங்கினான் உணர்வு  தீர்ந்தான்
- நின்று மயங்கியவனாய் உணர்வு
நீங்கினான்.

                                                 (2)

8705.

விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்;
                                            மெய்
உளைந்து உளைந்து உயிர்த்தான், ‘ஆவி உண்டு, இலை’
                                 என்ன, ஓய்ந்தான்;