கலிவிருத்தம் (வேறு)
|
7724. | வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத் துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள், திரிசடை தெருட்டுவாள், இனைய செப்புவாள்:
|
வரிசடை நறுமலர் வண்டு பாடு இலாத் - அழகையும் நிறத்தையும் கொண்ட மணம் மிக்க மலர்களில் மொய்க்கும் வண்டுகள் தங்குதல் இல்லாத; துரிசு அடை புரிகுழல் - அழுக்கடைந்து முறுக்கு ஏறியுள்ள கூந்தலைத்; சும்மை சுற்றிய ஒரு சடை உடையவட்கு - தொகுதியாகச் சுற்றி வைத்துள்ள ஒரு சடையை உடையவளாகிய சீதையிடம்; உடைய அன்பினாள் திரிசடை - மிக்குடைய அன்புடையவள் ஆகிய திரிசடை என்பவள்; தெருட்டுவாள் - தேற்றுபவளாய்; இனைய செப்புவாள் - இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.
|
ஒரு சடை உடைவள் - சீதை, குமையுறத் திரண்டு ஒரு சடை ஆகிய குழலாள் (காட்சிப் படலம் - 10) என்றதும் காண்க. வரி - அழகு. சடை - நிறம். திரிசடை - வீடணன் மகள், தந்தையைப் போலவே அற வழிப்பட்டவள். சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில் வரும் (3 - 12) பாடல்கள் காண்க. துரிசு - அழுக்கு, "யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி" என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தொடர் நினைவு கூர்வதற்கு உரியது. (7 ஆம் திருமுறை 527)
|
(93)
|
7725. | ‘உந்தை என்று, உனக்கு எதிர் உருவம் மாற்றியே, வந்தவன், மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்; அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கன் ஆம்’ எனா, சிந்தையின் உணர்த்தினள், அமுதின் செம்மையாள்.
|
உந்தை என்று - உன் தந்தை என்று சொல்லி; உனக்கு எதிர் உருவம் மாற்றியே வந்தவன் - உனக்கு எதிராக உருவத்தை மாற்றிக் கொண்டு வந்தவன்; ஓர் மாயையான் மருத்தன் என்று உளன் - ஒப்பற்ற மாயத்தொழில் செய்யவல்ல மருத்தன் என்ற பெயர் கொண்டவன் ஒருவன் உளன்; அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கன் ஆம் எனா - (அவன்) எல்லையிட முடியாத கொடிய தொழிலைச் செய்கின்ற அரக்கனாவான் என்று, அமுதின் |