பக்கம் எண் :

640யுத்த காண்டம் 

வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்;
இளங் கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில்
                                        கண்டான்.

 

விளைந்தவாறு உணர்கிலாதான் - (பிரம்மாத்திரத்தால்) நிகழ்ந்ததை
உணரமுடியாத வீடணன்; ஏங்கினான். வெதும்பினான மெய் உளைந்து
உளைந்து  உயிர்த்தான்
 -  ஏக்கங்கொண்டு, மனம் வெதும்பி உடம்பு
வருந்தி   வருந்தி   பெருமூச்சுவிட்டு;  ‘ஆவிஉண்டு,   இலை’  என
ஓய்ந்தான்
  -   ‘உயிர்   உண்டோ,’    இல்லையோ’  என்னும்  படி
ஓய்வுற்றவனாய்; வளைந்த  பேய்க்கணமும் நாயும் நரிகளும் இரிய -
(பின்புசற்று   தேறி)  பிணங்களைச்  சூழ்ந்து  கொண்டிருந்த    பேய்க்
கணமும் நாய்க்கூட்டமும், நரிக்கூட்டமும் அஞ்சி ஓடுமாறு;   வந்தான் -
(பிணங்களுக்கிடையே)   நடந்துவந்து;   இளங்கிளையோடும்  சாய்ந்த
இராமனை  இடையில் கண்டான்
- இளையவனாகிய இலக்குவனோடும்
தரையில் சாய்ந்து கிடக்கும் இராமனை இடையே பார்த்தான்.
 

                                                 (3)
 

    வீடணன், இராமன் மேனியில் வடு இன்மை கண்டு துயரம் தணிதல்
 

8706.

‘என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள்
                                             எல்லாம்,
பின்பு என்ப அல்ல; என்றும் தம்முடை நிலையின் பேரா;
முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும்
                                  தெரிந்தவாற்றால்,
அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும்
                                  அறிந்ததுஅன்றே.

 

என்பு   என்பது  யாக்கை  என்பது  உயிர் என்பது இவைகள
்எல்லாம்
- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடியைந்த) உயிர்
என்பதும்  ஆகிய  இவையெல்லாம்;  பின்பு  என்ப  அல்ல முன்பு -
(அன்பினை   நோக்கப்)   பிற்பட்டது    என்பதல்லாமல்,  (அவ்வன்பு
விளங்கித் தோன்றுவதற்கேதுவாக,   அதன்) முன்பே தோன்றி இயைந்து
நிற்பனவாகி;  என்றும் தம்முடை   நிலையின் பேரா - எக்காலத்தும்
(அன்பு    விளங்கித்     தோன்றுவதற்கேதுவாக    அதன்   முன்பே
தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுத