| 8707. | ‘ஆயினும், இவருக்கு இல்லை அழிவு’ எனும் அதனால் ஆவி போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித் தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலால், தெரிய நோக்கி. ‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ என நடுக்கம் தீர்ந்தான். | ஆயினும் ‘இவருக்கில்லை அழிவு’ எனும் அதனால் - (வீடணன் அத்தகைய) பேரன்புடையவனாயினும், “இவ்விராம இலக்குவர்க்கு அழிவு இல்லை” என்கின்ற உறுதியான நம்பிக்கை இருந்தமையால்; ஆவிபோயினது இல்லை - அவன் ஆருயிர் பிரியவில்லை; வாயால் புலம்பலன் பொருமி பொங்கி - வாயால் பல சொல்லிப் புலம்பவும் இல்லை, உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு துன்பம் கிளரப் பெற்று; தீயினும் எரியும் நெஞ்சன் - நெருப்பினும் மிக்குக் கொதித்து எரிகின்ற நெஞ்சினிடம் மிக்குத்தோன்றும் அச்சத்தால்; தெரியநோக்கி - அவர்களுடைய வீ்ழ்ந்து கிடக்கின்ற உடலங்களைத் தெளிவாகப் பார்த்துவிட்டு; ‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ - ‘தலைவனாகிய இராமன் மேனிக்கு (அம்பினாலாய) வடு ஏற்படவில்லை’; என நடுக்கம் தீர்ந்தான் - என அறிந்து மனநடுக்கம் நீங்கப் பெற்றவனானான். | (5) | வீடணன் துயர்தீர்க்கும் வழி ஆராய்தல் | | 8708. | அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின் நோக்கி, சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம் தேர்வான். | அந்தணன் படையால் வந்தது என்பதும் - (இராமலக்குவர் முதலானோர் அடைந்த இத்துன்பம்) பிரம்மாத்திரத்தால் ஏற்பட்டது என்பதனையும்; ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும் - ஆற்றல்மிக்க இந்திரசித்தே அதனை எய்தவன் |
|
|
|