பக்கம் எண் :

 மருத்துமலைப் படலம் 643

என்பதனையும்;   இளவற்காக  நொந்தனன்     இராமன்  என்னும்
நுண்மையும்
 -    இலக்குவனுக்காக          இராமன்      வருந்தி
மூச்சற்றுக்கிடக்கின்றான் என்னும் நுட்பத்தையும்;  நொய்தின் நோக்கிச்
சிந்தையின்  எண்ணி,   எண்ணி
 -  விரைவில்  அறிந்து  கொண்டு
(இதனைத்   தீர்த்தற்காம்   உபாயம்     பலவற்றையும்)  சிந்தையினால்
எண்ணி  எண்ணி;  தீர்வது  ஓர்  உபாயம் தேர்வான்  -  இத்துயர்
தீர்வதற்குரிய உபாயம் ஒன்றனை ஆராய்வானானான்.
 

                                                 (6)
 

8709.

‘உள்ளுறு துன்பம் ஊன்ற, உற்றனன் உறக்கம் அன்றோ?
தெள்ளிதின் உணர்ந்த பின்னை, சிந்தனை தெரிவென்
                                      அன்றே;
வள்ளலோ, தம்பி மாள வாழ்கிலன்; மாய வாழ்க்கைக்
கள்ளனோ வென்றான்?’ என்றான், மழை எனக் கலுழும்
                                    கண்ணான்.
 

உள்ளுறு   துன்பம் ஊன்ற - “உள்ளத்தில்   உற்ற பெருந்துயரம்
பதிந்துள்ளமையினால்;  உற்றனன்  உறக்கம்  அன்றோ  -  இராமன்
மூர்ச்சை  உற்றான்  அன்றோ?;  தெள்ளிதின் உணர்ந்த  பின்னை -
தெளிவாக  (அப்பிரான்) உணர்வு நிலைக்கு வந்த பின்னால்; சிந்தனை
தெரிவென்  அன்றே
- (அவ்விராமனுடைய) சிந்தனை  (எத்தகையதாக
இருக்கும்  என்பதனை)  அறிவேன் அன்றோ! வள்ளலோ,  தம்பிமாள
வாழ்கிலன்
 -  வள்ளல் தன்மையுடைய இராமனோ தம்பி  இறந்தபின்
தான்   வாழமாட்டான்  (இதுவே  மூர்ச்சை  தெளிந்தபின்    அவனது
முடிவாக  இருக்கும்); மாய வாழ்க்கைக்  கள்ளனோ  வென்றான்  -
(அங்ஙனமாயின்)    மாயத்    தன்மையை   உடைய     கள்வனாகிய
இந்திரசித்தோ  வெற்றி  பெற்றவனாவான்?”  என்றான்  மழையெனக்
கலுழும்  கண்ணான்
 -  எனத்  தனக்குள்  கூறிக்  கொண்டவனாகிய
வீடணன்  (பெருந்துன்பமுற்று)  மழைபோல்  நீர்சொரியுங்    கண்களை
உடையவனானான்.
 

                                                 (7)
 

8710.

‘பாசம் போய் இற்றாற் போலப்   பதுமத்தோன்  படையும்
                                         இன்னே
நாசம் போய் எய்தும்; நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை;